கொரோனா- பாலசரவணன் குடும்பத்தில்  நேர்ந்த துயரம்

கொரோனா- பாலசரவணன் குடும்பத்தில் நேர்ந்த துயரம்

கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்கி வருபவர் பாலசரவணன். கொரோனா இரண்டாவது அலைக்கு பலரும் பலியாகி வரும் நிலையில் அது இவரது குடும்பத்தையும் விட்டு வைக்கவில்லை.

பால சரவணன் தங்கை கணவர் கொரோனாவில் பலியாகி விட்டதால் அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு.

அன்பு நண்பர்களே…இன்று எனது தங்கையின் கணவர் கரோனா காரணமாக இறந்துவிட்டார். 32 வயது. தயவு கூர்ந்து மிகக் கவனமாக இருக்கவும். நமக்கெல்லாம் வராது என்று நினைப்பது மாபெரும் கோழைத்தனம். நம்மைப் பாதுகாக்க நம்மால் மட்டுமே முடியும். முக கவசம் அணிவீர். ப்ளீஸ்” என பாலசரவணன் கூறியுள்ளார்.