கார்த்திகை மாதம் பிறந்து விட்டாலே பலர் மாலை அணிந்து ஐயப்பன் கோவில் செல்கின்றனர். இந்த வருடம் கொரோனா காலம் என்பதால் ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு 1000 பக்தர்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி வழங்கப்பட்டது.
அதுவும் கொரோனா சர்ட்டிபிகேட் எல்லாம் எடுத்துக்கொண்டு ஆன்லைனில் தரிசனத்துக்கு புக் செய்து செல்ல வேண்டும்.
தற்போது திடீரென 5000 பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இது ஒரு புறம் இருக்க எப்படிப்பட்ட நெருக்கடிகளாக இருந்தாலும் நான் வருடா வருடம் மாலை அணிந்து ஐயப்பன் கோவில் செல்வேன் என சிம்பு கடந்த வருடம் சென்றது போல் இந்த வருடமும் செல்கிறார் போல, தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அய்யப்பசாமி மாலை அணிந்து தியானம் செய்வது போல் பதிவிட்டுள்ளார்.
Swamy Saranam 🙏🏻 pic.twitter.com/sBPgaMm5eI
— Silambarasan TR (@SilambarasanTR_) December 22, 2020

