அருண் ஜெட்லி காலமானார் – பாஜகவினர் இரங்கல்

அருண் ஜெட்லி காலமானார் – பாஜகவினர் இரங்கல்

முன்னாள் நிதியமைச்சரும், எம்.பியுமான அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் இன்று மரணமடைந்தார்.

பிரதமர் மோடியின் கடந்த ஆட்சியில் நிதியமைச்சராக இருந்தவர் அருண் ஜெட்லி. வழக்கறிஞராக இருந்த அவர் சட்ட அமைச்சராகவும் இருந்துள்ளார். பாஜகவில் உள்ள முக்கிய தலைவர்களில் இவரும் ஒருவர். பல முறை எம்.பி.யாக இருந்துள்ளார்.

மூச்சுதி திணறல் காரணமாக கடந்த 9ம் தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னார் அவரின் உடலில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்நிலையில், இன்று மதியம் 12 மணிக்கு அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இவரின் மரணத்திற்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.