சிறுமியின் ஆசையை நிறைவேற்றிய வேட்பாளர் அண்ணாமலை

சிறுமியின் ஆசையை நிறைவேற்றிய வேட்பாளர் அண்ணாமலை

நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில்  அரவக்குறிச்சி தொகுதியில் திரு அண்ணாமலை ஐபிஎஸ் போட்டி இடுகிறார். இவரின் பிரச்சார பாணியே வித்தியாசமானது மற்ற வேட்பாளர்கள் போல அல்லாமல் இவர் வித்தியாசமான முறையில் பேசுவது மக்களிடம் இயல்பாக அன்பாக பேசுவது என மக்களை கவர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் 2 தினங்களுக்கு முன் கரூர் பகுதியில் வேட்டமங்களம் என்ற கிராமத்தில் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் அப்போது பாலுசாமி என்பவரின் மகள் கார்த்திகா நீங்க எங்க வீட்டுக்கு எல்லாம் வருவிங்களா என கேட்டார். இதனால் நேற்று இரவு பிரச்சாரத்தை முடித்த அண்ணாமலை நேற்று இரவு அந்த சிறுமி வீட்டுக்கு சென்றார் . அங்கு இரவு உணவாக அவருக்கு பூரி வழங்கப்பட்டது.

காலை எழுந்த அண்ணாமலை காலையில் எழுந்து கிராம மக்களிடம் கலந்துரையாடி

மக்களின் குறைகள் அனைத்தும் தான் வெற்றி பெற்றவுடன் களையப்படும் என உறுதி கொடுத்த அண்ணாமலை பின்பு அங்கிருந்து மற்ற ஊர்களுக்கு பயணமானார்.