ஆஞ்சநேயர் பிறந்தது குறித்து ஆதாரம் வெளியிடப்படும்- திருப்பதி தேவஸ்தானம்

ஆஞ்சநேயர் பிறந்தது குறித்து ஆதாரம் வெளியிடப்படும்- திருப்பதி தேவஸ்தானம்

இராமாயணத்தில் வரும் ஆஞ்சநேயர் மிகவும் சக்தி வாய்ந்த கடவுளாகவும் பலம் வாய்ந்தவராகவும் ஹிந்து தர்ம புராணங்களில் போற்றப்படுகிறது.ராமரின் கதை சொல்லும்  ராமாயணத்தில் ஆஞ்சநேயரும் முக்கிய அங்கம் ஆவார்.

இவர் திருப்பதி அருகே அஞ்சனாத்ரி மலையில் அவதரித்ததாக புராணங்கள் சொல்கின்றன. அதனால் அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயன் என இவர் அழைக்கப்படுகிறார்.

ஆஞ்சநேயர் இந்த மலையில்தான் பிறந்தார் என்பதற்கு ஆதாரமாக பல தகவல்களை வரும் ஏப்ரல் 13 உகாதி அன்று திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் வெளியிட இருக்கிறதாம்.