ஆந்திராவை சேர்ந்தவர் துர்கா பிரசாத் ராவ். திருப்பதி பாராளுமன்ற தொகுதி எம்.பியாக உள்ளார். கடந்த மாதம் உடல்நிலை நலிவுற்ற இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கடந்த மாதம் 14ம்தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவருக்கு கொரோனா தொற்று உறுது செய்யப்பட்டது. மெல்ல அந்த தொற்றின் தாக்கத்தில் இருந்து மீண்டு வந்திருந்தார்.
இன்று அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மரணமடைந்தார். இவர் ஆந்திர ஆளும் கட்சியான ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவராவார்.