Tamil Flash News
சின்ன வீடா வரட்டுமா…ஓப்பனா கேட்ட ஐஸ்வர்யா?…அப்படி ஒரு லவ்வாம் பிரபு மேல!…
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக திகழ்ந்தவர் லட்சுமி. இவரது மகள் ஐஸ்வர்யா. ஹீரோயினாக பல படங்களில் நடித்தவர். “ராசுக்குட்டி” படத்தில் பாக்யராஜுக்கு ஜோடியாக நடித்திருந்தார். “உள்ளே வெளியே” படத்தின் பார்த்திபனுடனும், “எஜமான்” படத்தில் ரஜினியுடன் இரண்டாவது கதாநாயகியாகவும் நடித்திருந்தார்.
பிரபு மீது ஐஸ்வர்யாவிற்கு எப்போதுமே ஒரு க்ரஷ் இருக்குமாம். “பாலைவன ரோஜாக்கள்” படம் பார்த்த பிறகு அவரின் தீவிர ரசிகையாக மாறினாராம் ஐஸ்வர்யா. படத்திற்கு கருணாநிதி கதை வசம் எழுதியிருந்தார். சத்யராஜ், பிரபு இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.
ஐஸ்வர்யாவின் அம்மா லட்சுமி “பாலைவன ரோஜக்கள்” படத்தில் நடித்திருந்தார். அவரோடு நளினியும் நடித்திருந்தார். படத்தை பார்த்த பிறகிலிருந்து பிரபு மீது தனக்கு தீராத காதல் ஏற்பட்டதாம்.
இவர்கள் இருவரும் உலக சாதனை படைத்த தமிழ் படமான “சுயம்வரம்” படத்தில் நடித்திருந்தனர் ஜோடியாக. பிரபுவும் – ஐஸ்வர்யாவும் காதலித்து வருவார்கள் சுயம்வரம் நடக்கும் இடத்திற்கு ஐஸ்வர்யாவை வரவழைக்க பிரபு செய்யும் சேட்டைகள் படத்தை ரசிக்க வைத்திருக்கும். இவர்கள் இருவரின் யதார்த்தமான நடிப்பும் பெரிய அளவில் பேசப்பட்டது.
பிரபுவின் வீடு அருகே குடியேறிய ஐஸ்வர்யா “ஆம்பள” பட ஷூட்டிங்கின் போது பிரபுவிடம் சின்ன வீடு, பெரிய வீடுன்னு எப்படி இருந்தாலும் பரவாயில்லை. உங்களை மறைந்திருந்து பார்க்கவாவது வேணும்னு சொன்னாராம்.
பிரபு தவிர வேற யாரையும் அந்த இடத்திற்கு வர முடியாது. பிரபுவின் மனைவி புனிதா கூட ஐஸ்வர்யாவிற்கு பிரபு மீது இருந்த ஆசையை பற்றி பிறரிடம் சொல்லுவாராம். பிரபு மீதான தனது எண்ணங்கள் குறித்து ஐஸ்வர்யாவே சொல்லியிருந்தார்.