Published
2 years agoon
ஐஸ்வர்யா ராஜேஸ் சில மாதங்களுக்கு முன் நடித்து வெளிவந்த திரைப்படம் க/பெ ரணசிங்கம் இந்த படத்தில் வெளிநாட்டில் இறந்த கணவனது உடலை பெற அதிகாரிகள், கலெக்டர் என போராடும் வேடம் இவருக்கு.
இது போலவே சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த சவுந்தரம் என்ற பெண்ணும் கடந்த ஒரு மாதமாக போராடி வருகிறார்.
கடந்த ஜூன் 4ம் தேதி துபாயில் இறந்த கணவனது உடல் இன்னும் கிடைக்கவில்லை என உயரதிகாரிகள் பலரை பார்த்து மனு அளித்து வருகிறார்.
இந்த செய்தியை ஐஸ்வர்யா ராஜேஸ் தன் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதை சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் பார்வையில் படும்படி அவரது பெயரை டேக் செய்து பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஸ்.
Pls look into this @Udhaystalin 🙏🙏 https://t.co/3wOqQZUs5P
— aishwarya rajesh (@aishu_dil) July 4, 2021