Published
1 year agoon
தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘நாளை மறுநாள் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அவற்றை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வருகிற 27ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், அரியலூர், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜன.28ஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், அரியலூர் ,திருச்சி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூரில் பெய்த மழையில் வெள்ளப்பெருக்கில் சரிந்து விழுந்த பிரமாண்ட வீடு
இலங்கையில் வரலாறு காணாத கனமழை
தமிழகத்தில் மீண்டும் புயல் சின்னம்-கடும் மழை வாய்ப்பு
தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாடகளுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்!
அடுத்த இரண்டு நாளில் வெப்பச் சலன மழை பெய்ய வாய்ப்பு!