கோவையைச் சேர்ந்த சீனியப்பன் என்பவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவர், கடந்த 1990-ம் ஆண்டு மார்ச் மாதம்26-ம் தேதி தனது வியாபாரத்தை முடித்துக் புறப்படுகையில் ரூ.35 ஆயிரத்தை தனது கைப்பையில் வைத்துக் கொண்டு வந்து கொண்டிருந்தார்.வாகனத்தில் தனது பணத்தை வைத்து ஸ்வாமி கும்பிட்டு கொண்டிருக்கையில்
அப்போது அவரது வாகனத்தை திருட இருவர் முயன்றனர். இதை தடுக்க முயன்ற சீனியப்பனை, அந்நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு, பணத்துடன், இருசக்கர வாகனத்தையும் திருடிக் கொண்டு தப்பினர்.
சீனியப்பனுக்கு தோளில் காயம் ஏற்பட்ட நிலையில் புகாரின் பேரில் கடைவீதி போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து, இலங்கையின் மட்டகளப்பு பகுதியைச் சேர்ந்த லீமா என்ற மகேந்திரன் (அப்போதைய வயது 25), கொடிக்கம்பம் பகுதியைச் சேர்ந்த ராஜ் என்ற ஆனந்தராஜ் (அப்போதைய வயது28) ஆகியோரை கைது செய்தனர்.
இருவர் மீதும் கடந்த 25.06.1991-ல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த28.07.1992-ல் ஜாமீனில் சென்ற இருவரும், அதன் பின்னர் ஆஜராகவில்லை. இவர்களுக்கு ஜாமீன் உறுதி அளித்தவர்களும், போலி முகவரியை அளித்து உள்ளனர்.
எனவே, இருவருக்கும் பிடியாணை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். இது தற்போது வரை நிலுவையில் உள்ளது. இருவரது விவரம் தெரிந்தவர்கள் காவல் துறையிடம் தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.