தமிழகத்தில் 3 ஸ்டார்களுக்கு மட்டுமே மதிப்பு உள்ளது- நீதிபதிகள் வேதனை

தமிழகத்தில் 3 ஸ்டார்களுக்கு மட்டுமே மதிப்பு உள்ளது- நீதிபதிகள் வேதனை

மதுரை மாவட்டம் துவரிமானை சேர்ந்த மதுரேசன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்  இந்தியாவிலுள்ள சிறப்புத்திறன்  மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று அதிகளவில்  பதக்கங்களும், பரிசுகளும் பெறுகின்றனர். இவர்களை ஊக்குவித்து மத்திய, மாநில  அரசு சார்பில் ரொக்கப் பரிசுகள் வழங்கபடுகிறது..ஆனால் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு இணையாக இவர்களுக்கு பரிசுகளும் வேலைவாய்ப்பு வழங்கப்படுவது இல்லை என கூறி இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள், கிருபாகரன், மற்றும் புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் கூறியதாவது,மனுதாரர் மாநில அளவிலும் உலக அளவிலும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு பதக்கங்களையும், பெற்றுள்ளார் இருந்தாலும் அவரை தமிழக அரசு அலுவலக உதவியாளராக நியமனம் செய்துள்ளது.

இது போல பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு கிரிக்கெட்டில் சாதனை படைத்த சச்சின் டெண்டுல்கரை அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா..? விளையாட்டுத்துறையில் சாதித்த மாற்றுத்திறனாளி மாணவர்களை உலகநாடுகள் கொண்டாடுகின்றன. தமிழ்நாட்டில் மட்டும் அது இல்லை என கூறியுள்ளனர்

அரசுக்கு தெரிந்தது 3 ஸ்டார், அரசியல் ஸ்டார், சினிமா ஸ்டார், கிரிக்கெட் ஸ்டார் இந்த 3 ஸ்டார்தான் அரசுக்கு தெரியுமா என கேள்வி எழுப்பியுள்ளனர்.