Entertainment
பஞ்சாபி பாடகர் கொடூரமாக சுட்டுக்கொலை
பிரபல பஞ்சாபி பாடகர் சித்து மூன்ஸ்வாலா. சிறந்த பாடகரான இவர் காங்கிரஸ் கட்சியிலும் முக்கிய பதவிகளை வகித்து வந்தார்.
இவர் மான்சா மாவட்டம் என்ற இடத்தில் ஜவஹர்கே என்ற இடத்துக்கு சென்றார் அப்போது ஜீப்பில் சென்ற நிலையில் அடையாளம் தெரியாத நபர்கள் இவரை குறிவைத்து தாக்கினர்.
இவரை 30 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்ட நிலையில் சித்து மூன்ஸ்வாலா மிகவும் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சித்து மூன்ஸ்வாலா இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இவருடன் மேலும் இருவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரசியல் , சினிமா பிரபலங்களுக்கு அளிக்கப்படும் தேவையற்ற பாதுகாப்பை நேற்று முன் தினம் தான் பஞ்சாப் அரசு விலக்கியது. அதற்குள் இப்படி ஒரு கொடூர சம்பவம் நடந்தது பஞ்சாபில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
