விஜய் கதாநாயகனாக நடிக்க துவங்கி அவரது முகம் மக்கள் மனதில் பதியத்துவங்கிய காலத்திலிருந்தே அவரது குரலில் தான் நடிக்கும் படங்களில் பாடல்களை பாடுவதை பழக்கமாக வைத்து வருகிறார். கண்களை மூடிவிட்டு சொல்லலாம் அவரது படத்தில் நிச்சயமாக ஒரு குத்துப்பாட்டு இருக்கத்தான் செய்யும் என்பதை.
வயதாக வயதாக அவரது நடனத்தில் வேகம் கூடத்தான் செய்கிறதே தவிர அதில் இது வரை தொய்வு ஏற்பட்டது கிடையாது. புயல் வேகத்திலான அசைவுகளாக இருக்கட்டும், சின்ன சின்ன டான்ஸ் ஸ்டெப்களாக இருக்கட்டும் இவருக்கு நிகர் இவரே தான். இப்படி நடனத்தில் கில்லாடியான விஜய் தனது சொந்த குரலில் பாடி நடனமாடிய பாடிய பாடல்கள் பல உண்டு.
அவரது தாய் ஷோபனாவுடன் “விஷ்ணு” படத்தில் அவர் பாடிய ‘தொட்டபேட்ட ரோட்டு மேல முட்டை புரோட்டா’ பாடலில் துவங்கி ‘அய்யய்யோ அலமேலு ஆவின் பசும்பாலு’ பாடலாக இருக்கட்டும் தியேட்டர் ஸ்கிரீன் முன்னால் வந்து நின்று வந்து நின்று ஆட வைக்க செய்தது ரசிகர்களை. “மாண்புமிகு மாணவன்” படத்தில் அவர் பாடிய ‘திருப்பதி போன பட்ட பட்ட’ பாடலாக இருக்கட்டும்.

“வாரிசு” படத்தில் அவரின் குரலோடு வந்த ‘ரஞ்சிதமே , ரஞ்சிதமே’ பாடலுக்கு ஆட நினைக்காத நெஞ்சங்களே கிடையாது என சொல்லலாம்.
“தலைவா” படத்தில் பாடிய ‘வாங்கண்ணா, வணக்கங்கண்ணா’ பாடலாக இருக்கட்டும். “ஜில்லா”வில் வரும் ‘கண்டாங்கி கட்டி வந்த பொன்னு’ பாடல், “நெஞ்சினிலே” படத்தின் ‘தங்க நிறத்துக்குத்தான் தமிழ் நாட்ட எழுதித்தரட்டுமா’, “மாஸ்டர்” படத்தின் ‘லெட் மீசே எ குட்டி ஸ்டொரி’, “பிகில்” படத்தில் வரும் ‘நெஞ்சுக்குள்ள குடியிருக்கும் நம்ம’ பாட்டு. சமீபத்தில் வெளிவந்த “லியோ” படத்தின் ‘நா அண்ணன் எறங்கி வரவா’ பாடல் விரைவாக வெளியாகிவிடும் என எதிர் பார்க்கப்படும் “கோட்” படத்தின் ‘விசில் போடு’ பாடல் என அவரின் படங்கள் பெற்ற வெற்றிளைப்போலவே இந்த பாடல்களும் ரசிக்கர்களை கைத்தட்டி ரசிக்க வைத்தவைகளாகும்.