என்னை நடிக்கவிடாமல் செய்ததே வடிவேலு தான்… ஐகோர்ட்டில் விளக்கம் கொடுத்த சிங்கமுத்து…!

என்னை நடிக்கவிடாமல் செய்ததே வடிவேலு தான்… ஐகோர்ட்டில் விளக்கம் கொடுத்த சிங்கமுத்து…!

தன்னை நடிக்க விடாமல் செய்ததை வடிவேலு தான் என்று ஐகோர்ட்டில் சிங்கமுத்து விளக்கம் கொடுத்துள்ளார்.

Youtube சேனல்களில் நடிகர் சிங்கமுத்து தன்னை குறித்து அவதூறாக பேசியதற்காக 5 கோடி மான நஷ்டஈடு கேட்டு நடிகர் வடிவேலு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக வடிவேலு தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இது நடிகர் சிங்கமுத்து பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் நடிகர் வடிவேலு தொடர்ந்த வழக்கு தொடர்பாக சிங்கமுத்து இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் நடிகர் வடிவேலுவின் வெற்றிக்குப் பின்னால் இருந்ததே நான் தான் என்னை துன்புறுத்தும் நோக்கில் நடிகர் வடிவேலு வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார். மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கில் நான் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

நான் நடிப்பதை தடுக்கும் வகையில் என்னை பற்றி தயாரிப்பாளர்களிடம் தவறாக கூறியதே வடிவேலு தான். நடிகர் வடிவேலு சொத்து வாங்கியதில் எந்த நிதி இழப்பையும் அவர் எதிர்கொள்ளவில்லை. அவரால் எனக்கு தான் மிகப்பெரிய நஷ்டம். என்னை திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்க விடாமல் என்பதை குறித்து தவறாக சித்தரித்து பேசினார் என்று ஐகோர்ட்டில் சிங்கமுத்து விளக்கம் கொடுத்துள்ளார்.