பல படங்களில் வில்லனாக நடித்து கதாநாயகர்களை மிரட்டியவர் அசோகன். அவரது சண்டை காட்சிகளை அந்த காலத்தில் ரசிகர்கள் பார்க்க வந்த ரசிகர்களை தனது கொடூர வில்லத்தனத்தால் பயங்காட்டியிருந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது.
அசோகன், எம்.ஜி.ஆரை வைத்து “நேற்று இன்று நாளை” படத்தை தயாரித்தார். அந்த படத்திற்கான பாடல்கள் எழுதப்பட்ட போது எம்.ஜி.ஆர். திருப்தி அடையவே இல்லையாம். பாடல் ஆசிரியர் எத்தனை பாடல்களை எழுதி கொடுத்தாலும் அது தன்னுடைய கருத்துக்கு ஒத்துப் போகவில்லை என எம்.ஜி.ஆர். கழித்துக்கொண்டே இருந்தாராம்.
இந்த சூழ்நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்திருந்த பட குழு கவிஞர் வாலிக்கு அழைப்பு விடுத்திருந்தது. உடனே அவர் என்ன சிட்டுவேஷன் என கேட்டிருக்கிறார். அதேபோல் என்ன பிரச்சனை என்ன என்றும் அதற்கு தான் என்ன செய்ய வேண்டும் எனவும் கேட்டிருக்கிறார்.
நடந்ததையெல்லாம் படக்குழுவினர் சொல்லியிருக்கிறார்கள்.சரி என சொல்லிக் கொண்டு கிளம்பிய வாலி மூன்று நாட்களில் பாடல் வரிகளை எழுதிக்கொண்டு வந்து காட்டியுள்ளார்

வரிகளை கேட்ட உடனே எம்.ஜி.ஆருக்கு பிடித்து போய்விட்டதாம். வரிகளை வைத்து காட்சியை படமாக்க வேண்டுமென எம்.ஜி.ஆர் சொல்லியும் விட்டாராம் மறுநிமிடமே.
அப்படி அவர் எழுதி கொடுத்த பாடல் ‘தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று, அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று , நல்லவருக்கு வாழ்வு வரும் நாளை, இது அறிஞர் அண்ணா எழுதி வைத்த ஓலை’ என்ற “நேற்று இன்று நாளை” படத்தில் வந்திருந்த பாடல் தான் இது.