டி.ராஜேந்தர் பன்முகத்தன்மை கொண்ட கலைஞர் இவர் என்று சொன்னால் அது மிகையாகாது. இயக்குனர், நடிகர், வசனகர்த்தா, தயாரிப்பாளர், இசையமைப்பாளர், எடிட்டர், பாடலாசிரியர் என சினிமாவில் இவரின் கால் தடம் படாத இடங்களே கிடையாது என சொல்லலாம்.
தங்கச்சி சென்டிமென்ட் படங்கள் என்றாலே இவரது பெயரும், படங்களும் நினைவில் வந்துவிடும். அதே போல காதல் பாடல்கள் என்றாலும் இவரது பாடல்களுக்கு இன்றும் ஒரு முக்கிய இடம் உண்டு.
படங்களில் இவர் எழுதி பேசிய அடுக்கு மொழி வசனங்களை போலே வேறு அமைந்தால் அது இனி அபூர்வம் தான் என்றும் கூட சொல்லலாம்.
சினிமா மீதும், தமிழ் மொழியின் மீதும் மிகப்பெரிய பற்றினை கொண்டவர் இவர் என்று சொன்னால் அது ஏற்புடையதாகவே இருக்கும்.
முகத்தில் தாடியுடனே படங்களில் நடித்திருப்பார். டி.ராஜேந்தரின் அடையாளங்களில் அவரது தாடியும் ஒன்றாகும். வளர்ந்து வரும் கலைஞர்கள் பலருக்கும் இவர் ஒரு முன்மாதிரியாகவே இருந்து வருகிறார் இன்றளவும்.
வசனம், பாடல், இசை இதுவெல்லாம் எப்படி இவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு தனித்துவத்தை கொடுத்துள்ளதோ அதைவிட ஒரு முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது இவரின் சினிமா கேரியரில்.

நம்மில் பலருக்கும் இதுவரை இது தெரியாத விஷயாமாகவே கூட் இருக்கலாம். தனது படங்களிலோ அல்லது தனக்கு ஜோடியாக நடித்த கதாநாயகிகளை பட காட்சியிலோ அல்லது பாடல் காட்சிகளிலோ ஏன் டூயட் பாடல்களில் கூட அவர்களை இவர் தொட்டு நடித்தது கிடையாதாம் இதுவரை.
ரோமேன்ஸ் காட்சிகள் வந்துவிட்டால் குடும்பத்துடன் திரையரங்கம் சென்று படபார்க்கும் ரசிகர்களுக்கு விரசம் தட்டி, முகம் சுழிக்க வைத்த காட்சிகள் வரை கொண்டுள்ள தமிழ் சினிமாவில் இப்படி பெண் நடிகைகளை தொடாமலேயே நடித்த சாதனைக்கு இவர் மட்டுமே சொந்தக்காரர்.