Connect with us

நானும் கமல் ஆவேனா?…ஸ்ரீதேவிகிட்ட ஜோஷியம் கேட்ட ரஜினி!…

sridevi rajini

Latest News

நானும் கமல் ஆவேனா?…ஸ்ரீதேவிகிட்ட ஜோஷியம் கேட்ட ரஜினி!…

ரஜினி, கமல் தமிழ் திரை உலகின் அசைக்க முடியாத பிம்பங்கள். நடிப்பில் ‘சகலகலா வல்லவர்’. அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களேயில்லை. தமிழ் சினிமாவில் அவர் புகுத்தாத புதுமைகளுமில்லை.

ஒரு படம் வெற்றியடைந்தாலும்,தோல்வியடைந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாதவர். அவர் சொல்ல வேண்டிய கருத்துக்களை கச்சிதமாக நறுக்கென்று  சொல்வதில் கில்லாடி  கமல்ஹாசன்.

சிறுவயது முதலே அர்ப்பணிப்போடு சினிமாவில் பணியாற்றி வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2ல் நடித்து வருகிறார்.

பஸ் கண்டக்டர் சிவாஜி ராவ் கெய்க்வாட்,  இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவருடைய ‘ஸ்டைலால்’ ஈர்க்கப்பட்டார்கள் ரசிகர்கள். அதற்கு பரிசாக அவர் மீது அன்பினை அள்ளி, அள்ளி கொடுத்து வருகின்றார்கள்.

தமிழில் மட்டுமல்லாமல் இந்திய திரை உலகின் சூப்பர் ஸ்டாராகவும் இருந்து வருகிறார். ரஜினி – கமல் இருவரும் ஆரம்ப காலத்தில் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். அதில் கமல்ஹாசனுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. “16 வயதினிலே”வில் துவங்கி “நினைத்தாலே இனிக்கும்” என பல படங்களில் நடித்துள்ளனர்.

rajini sridevi kamal

rajini sridevi kamal

அப்படித்தான் “மூன்று முடிச்சு” படத்தில் இவர்கள் இருவரும் இணைந்தனர். ஸ்ரீதேவி கதாநாயகியாக நடிக்க, சூட்டிங் நடந்து கொண்டிருந்தது. கமல், ஸ்ரீதேவி, ரஜினி இவர்கள் மூவரில் ரஜினிக்கே சம்பளம் குறைவாம் அப்போது.

ஸ்ரீதேவியிடம், ரஜினிகாந்த் நான் எப்போது கமல்ஹாசன் மாதிரி வருவேன்? என கேட்டாராம். அதற்கு ஸ்ரீதேவியோ சீக்கிரம் வருவீர்கள், கவலை வேண்டாம்  எனச்சொல்லி இருக்கிறார்.

தனது தாய்க்கு மிகவும் நெருக்கமானவர் ரஜினிகாந்த் என்றும். அவர் தங்கள் குடும்பத்தில் ஒருவர் என்றும். ரஜினியை தனது மகனாகவே பார்த்து வந்தார் என் அம்மா  என்றும்  ஸ்ரீதேவி  சொல்லியிருந்திருக்கிறார்.

பாருங்க:  அவர் மட்டும் தான் ஸ்பெஷல்!...மத்தவங்களை பத்தி எனக்கென்ன...பாரபட்சம் காட்டிய கௌதம் மேனன்?...

More in Latest News

To Top