அவனுங்கள எல்லாம் செருப்பால் அடிக்கணும்… தப்பு செஞ்சவங்களுக்கு தண்டனை கிடைக்கணும் – நடிகர் விஷால்..!

அவனுங்கள எல்லாம் செருப்பால் அடிக்கணும்… தப்பு செஞ்சவங்களுக்கு தண்டனை கிடைக்கணும் – நடிகர் விஷால்..!

பாலியல் அத்துமீறலில் ஈடுபடுபவர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என்று நடிகர் விஷால் கூறியிருக்கின்றார்.

மலையாள சினிமாவில் தற்போது ஹேமா கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கை மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கின்றது. இதனால் மலையாள திரையுலகில் நடந்த பாலியல் அத்துமீறல்கள் வெளிச்சத்திற்கு வந்து நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. தவறான எண்ணத்தில் அழைக்கும் திரைத்துறையினர் யாராக இருந்தாலும் நடிகைகள் அவர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என்று தமிழ் திரைப்பட சங்க செயலாளர் விஷால் தெரிவித்து இருக்கின்றார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது “சினிமாவில் நடிக்க வரும் பெண்கள் மிக கவனமாக, உஷாராக இருக்க வேண்டும். தவறான எண்ணத்தில் அழைக்கும் திரைத்துறையினர் யாராக இருந்தாலும் அவர்களை செருப்பால் அடிக்க வேண்டும். கேரளாவில் ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டதை போன்று தமிழ் திரையுலகிலும் ஒரு கமிட்டி அமைக்கப்பட வேண்டும்.

தமிழ் சினிமாவில் பத்து பேர் கொண்ட குழு உடன் ஒரு கமிட்டி அமைப்பது தொடர்பான பணிகள் நடைபெறுகின்றது. தமிழ் திரையுலகிலும் பாலியல் சீண்டல்கள் நடக்கின்றதா இல்லையா என்று என்னால் கூற முடியாது. சினிமாவில் நடிக்க வரும் பெண்களில் 20 சதவீதம் பேருக்கு தான் வாய்ப்பு கிடைக்கின்றது. 80 சதவீதம் பேருக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை.

சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி கொடுப்பதாக கூறி ஏமாற்றுபவரை செருப்பால் அடிக்க வேண்டும். எந்த பிரபலமாக இருந்தாலும் தப்பு செய்தவர்கள் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும்” என்று விஷால் கூறி இருக்கின்றார்.