ஆர்.கே .செல்வமணி தமிழ் சினிமாவில் குறுகிய காலம் மட்டுமே படங்களை இயக்கி வந்திருக்கிறார். எண்ணிக்கையில் சொற்பமான படங்களாகவே இருந்தாலும் , அவை அடைந்த வெற்றிகளை கணக்கிட்டு பார்த்தால் இத்தனையா? என ஆச்சரியப்படவைக்கும்.
‘கேப்டன்’ விஜயகாந்தின் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய வெற்றிகளின் பின்னனியில் இருந்தவர்களில் ஒருவர் செல்வமணியுமே. புனைப்பெயராக ‘கேப்டன்’ என மாற முதல் காரணாமாக இருந்தது “கேப்டன் பிரபாகரன்” படமே
. அதோடு மட்டுமல்லாமல் “புலன் விசாரனை” படமும் இவர் இயக்கியதே விஜயகாந்த்தை வைத்து.
இப்படி சுமார் 12 படங்கள் வரை எடுத்திருந்த இவரது பங்களிப்பு தமிழ் சினிமாவில் நின்று போகாமல் தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார்.
அருண் பாண்டியன், நெப்போலியன், மன்சூர் அலிகான், நடித்த “அசுரன்” படத்தினை எழுதி தயாரித்தது செல்வமணியே. சமீபத்தில் வந்த ஒரு படத்தில் கூட “அசுரன்” படத்தின் ‘சக்கு,சக்கு வத்திக்குச்சி’ பாடல் மீண்டும் திரையில் வந்து படம் பார்க்க வந்த ரசிகர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆடவைத்ததாக் சமீபத்திய செய்திகள் சொல்லியிருந்து.

இதே போல ராம்கி, மன்சூர் அலிகான், நெப்போலியன், ரோஜா நடிப்பில் 1996ம் ஆண்டு வெளிவந்த “ராஜாளி” படமும் இவர் எழுதி, தயாரித்ததே. இந்த படங்களும் இவரின் வெற்றி பட்டியலில் இணைந்தவை. இப்படி இயக்குனராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் இருந்த தமிழ் சினிமாவில் மகிழ்வித்து வந்திருக்கிறார் செல்வமணி. தனக்கென ஒரு தனியான சிம்மாசனத்தை அமைத்து அதில் அமர்ந்து ரசிக்க வைத்தவர் செல்வமணியே.
பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த “செம்பருத்தி” படத்தில் ரோஜா நடிக்கும் இருவரிடையே மலர்ந்த காதலே வெற்றிகரமான தம்பதியராக வாழ்ந்து வர வழிசெய்தது.