garudan
garudan

இரையை கொத்தி தூக்கியதா கருடன்?…சூப்பராமே சூரி!…கருடன் திரை விமர்சனம்….

சூரி கதாநாயகனாக நடித்து வெளிவந்துள்ளது “கருடன்”. சசிக்குமார், சமுத்திரக்கனி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி, ஷிவிதா நாயர், பிரிகிடா, உன்னி முகுந்தன் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ளது “கருடன்”. வெற்றிமாறானின் கதை படமாக இயக்கப்பட்டுள்ளது.

soori
soori

இணைபிரியா நண்பர்கள் சசிக்குமார், உன்னி முகுந்தன். இதில் உன்னி முகுந்தனின் வலது கரமான ‘சொக்கன்’ கதாப்பாத்திரத்தில் சூரி. காவல் அதிகாரியாக வரும் சமுத்திரக்கனி, அவரின் ஆதரவால் அமைச்சராகும் அரசியல்வாதி கோவில் நிலத்தை அபகரிக்க நினைக்கிறார்.  அரசியல்வாதியாக ஆர்.வி.உதயக்குமார்.

கோவில் டிரஸ்ட் வசம் இருக்கும் இடத்தை கைப்பற்ற என்னவெல்லாம் செய்கிறார். அதில் வெற்றி பெறுகிறாரா? அல்லது தோற்கிறா?.

garudan soori
garudan soori

இது நண்பர்களுக்கிடையே என்ன பாதிப்பை தருகிறது. வாழ வழியின்றி வரும் சொக்கன் சூரியை அரவணைக்கிறார் உன்னிமுகுந்தன். தனக்கு ஆதரவளித்த உன்னி முகுந்தன் மீதான விஸ்வாசத்தை சூரி எப்படி காட்டுகிறார் என்பது தான் படத்தின் கதை.

துரை செந்தில் குமார் இயக்கியுள்ள விதம் பாராட்டை பெறுகிறது. யுவன் ஷங்கர் ராஜா இசை பிரமிக்க வைக்கிறது. குறிப்பாக பின்னனி இசை காட்சிகளுக்கு வலு சேர்கிறது.

சூரி “விடுதலை” படத்தில் நாயகனாக மாறியிருந்தார். அதே சூடு குறையாத விதமே  “கருடன்” படத்தில் நடிப்பில் கலக்கியிருக்கிறார்.

நட்பு, விஸ்வாசம் இதற்கிடையே நடிக்கும் போராட்டமே படம். கலகலப்பான முதல் பாதி, விறுவிறுபான இரண்டாம் பாதி இப்படி திரையில் கச்சிதமாக வட்டமிடிக்கிறார் “கருடன்”.

படத்தின் கடைசி அரை மணி நேரத்தில் யாருமே எதிர்பார்த்திராத திருப்பங்கள். சூரிக்கு சபாஷ் போட்டு சூப்பர் என சொல்ல வைத்துள்ளது “கருடன்”. மொத்தத்தில் காத்திருந்து வெற்றி என்ற தனது இரையை கச்சிதமாக வேட்டை ஆடியுள்ளார் “கருடன்”. வெள்ளித்திரை வானில் அதிக நாள் வட்டமடிப்பார் “கருடன்”.