---Advertisement---

டயலாக் பேச பயந்து ஓடிய ரஜினி?… இதென்னடா புது புரளியா இருக்கு!…

Published on: April 26, 2024
rajinikanth
---Advertisement---

ரஜினிகாந்த் என்றவுடன் நினைவுக்கு வருவது அவருடைய “பஞ்ச்” வசனங்கள் தான். அந்த பஞ்சு வசனங்களை அவர் உச்சரிக்கும் விதம் அதில் இருக்கும் ஸ்டைல் ரசிகர்களை அதிகமாக கவர்ந்திருக்கும். படத்தில் வரும் “பஞ்ச்” டயலாக்களை கேட்பதற்கும், அதை பார்ப்பதற்கும் ஆர்வாமாக செல்வார்கள் அவரது ரசிகர்கள்.

“நான் ஒரு தடவை சொன்னா”, “என் வழி தனி வழி”, “இது அண்ணாமலை கணக்கு,எடுறா வண்டிய” இதெல்லாம் தியேட்டர்களிலிருந்து வின்னை பிழந்த விசில் சத்தங்களை கேட்க வைத்த வசனங்கள்.

இப்படிப்பட்ட ரஜினிகாந்த் வசனங்கள் அதிகமாக இருக்கிறது அதை உச்சரிக்க முடியவில்லை என பயந்து ஓடிய சிரிப்பு வர வரவழைக்கக் கூடிய ஒரு சம்பவம் நடந்திருக்கிறதாம்.

bhuvana
bhuvana

“புவனா ஒரு கேள்விக்குறி” படத்தை எஸ்.பி.முத்துராமன். அதில் சிவகுமார், சுமித்ரா எல்லாம் நடித்திருக்கிறார்கள். அப்போது படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது திடீரென ரஜினியை காணவில்லையாம். இயக்குனர் ரஜினி என அவரது உதவியாளரிடம் கேட்டுள்ளார்.

ரஜினி நடந்து வெளியே சென்றுவிட்டார் என சொல்லவும், ரஜினியை கூப்பிட்டு வர சொல்லி இருக்கிறார். என்ன இப்படி சொல்லாம செஞ்சிட்டீங்க, வெளியில போயிட்டீங்கன்னு முத்துராமன் கேட்டிருக்கிறார்.
கே.பாலச்சந்தர் சார் படத்துல மொத்தமா வைக்கிற டயலாக்க நீங்க ஒவ்வொரு சீனுக்கும் வைக்கிறீங்க.

என்னால பேச முடியல, நான் பேசினால் சரியாக வருமா? என்று ரஜினி வந்து வேதனைபட தெரிவித்திருக்கிறாராம். அதெல்லாம் இல்லை உங்களால் நிச்சயமாக முடியும் நீங்கள் பேசினால் அந்த வசனங்கள் எல்லாம் நன்றாக இருக்கும் என்று உற்சாகம் கொடுத்திருக்கிறார் முத்துராமன். அது போலவே அந்த படத்தில் ரஜினி பேசிய வசனங்கள் எல்லாம் கைதட்டல்களை பெற்றுத் தந்திருக்கிறது.

পড়তে ভুলবেন না