கருப்பு வெள்ளை நிறத்தில் படங்கள் வந்த காலங்களிலேயே தமிழ் சினிமாவில் கலக்கியவர் இயக்குனர் ஸ்ரீதர். எம்.ஜி. ஆர், சிவாஜி, முத்துராமன் போன்ற முன்னனிகளை வைத்த வெற்றி படங்களை கொடுத்தவர். “ரிக்ஷாக்காரன்”, “உரிமைக்குரல்” போன்ற வெற்றி படங்கள் எம்.ஜி.ஆருக்கு. “உத்தமபுத்திரன்” மாதிரியான வெற்றிகளை சிவாஜிக்கும் வழங்கியவர் இவர்.
காலத்தால் அழியாத காவியமான “காதலிக்க நேரமில்லை” என்ற பிரம்மாணட வெற்றி படத்தினை தமிழ் சினிமாவில் படைத்த படைப்பாளி இவர். இந்த படத்தின் நகைச்சுவை காட்சிகள் இன்றும் மனதில் நிற்க தான் செய்கிறது.
நோய்வாய்ப்பட்ட காரணத்தினால் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருந்தார் ஸ்ரீதர். பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்த இவர் சதா சர்வ காலமும் சினிமாவை பற்றியே பேசிக்கொண்டிருப்பாராம். அவரை சந்திக்க வரும் நபர்களிடம் கூட படங்கள் பற்றியே பேசி வந்திருக்கிறார்.

கமல்ஹாசன், ரஜினிகாந்த் இவர்கள இருவரையும் வைத்து இவர் இயக்கிய இளமை ஊஞ்சலாடுகிறது சக்கை போடு போட்டது வெளியான நேரத்தில். 1978ம் வருடம் இந்த படம் வெளிவந்தது. இதன் பிறகு ரஜினிக்கு ஸ்ரீதர் மீதிருந்த மரியாதையும், அன்பும் அதிகரித்ததாம்.
மரியாதை நிமித்தமாக ஸ்ரீதரை சந்தித்த ரஜினிகாந்த் சென்றிருக்கிறார். அப்பொழுது பண உதவி ஏதும் வேண்டுமா என ரஜினி கேட்க அதற்கு ஸ்ரீதரோ பண உதவி எல்லாம் வேண்டாம் என்னிடம் அது இருக்கிறது அதற்கு பதிலாக எனக்கு ஒரு படம் பண்ணி தர முடியுமா? என கேட்டிருக்கிறார்.
அவர் கேட்ட மறுநிமிடமே ரஜினி சம்மதித்தும் விட்டாராம். அவர் உறுதி கொடுத்ததன் அடிப்படையில் வாய்ப்பு அருணாச்சலம் படத்தில் இணை தயாரிப்பாளராக வழங்கப்பட்டதாம். இந்த தகவல்களை ஸ்ரீதரின் மகன் சஞ்சய் சொல்லியிருந்தார்.











