நடன இயக்குனராக அறிமுகமாகி, கதாநாயகனாக மாறி இப்பொழுது தனது நடிப்பிற்காகவும், தனது நடன அசைவுகளுக்காகவும் உற்று நோக்க படக்கூடியவராக வலம் வந்து கொண்டிருப்பவர் ராகவா லாரன்ஸ்.
பிரபுதேவாவிற்கு இணையான நடன அசைவுகளே இவரை தலை மீது தூக்கி வைத்து கொண்டாட வைத்து. “ஜென்டில்மேன்” படத்தில் வரும் ‘சிக்கு,புக்கு,சிக்கு,புக்கு ரயிலே’ பாடலில் நடன குழுவில் ஒருவராக வந்திருப்பார் ராகவா லாரன்ஸ்.

ரஜினியின் பரிந்துரையாலே தமிழ் திரை உலகுக்கு வந்த இவர், முன்னணி நடிகர்கள் படங்களில் பாடல் காட்சிகளில் நடனமடியும் இருந்திருக்கிறார். விஜயுடன் “திருமலை” படத்தில் ஆடிய பாடலில் இருவரின் நடனம் சிறப்பானதாக அமைந்தது. அஜீத்குமாரின் “அமர்க்களம்” படத்தில் ‘காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா’ பாடல் நடனமாடியிருப்பார்.
ஒரு கட்டத்தில் கதாநாயகனாகவும் தன்னை மாற்றிக்கொண்டார், தெலுங்கு பட உலகில் இயக்குனர் அவதாரமும் எடுத்தார், தமிழில் இவர் நடித்த “முனி” படத்தின் மூலமாக தனக்கென ஒரு தனி பாணியை கையில் எடுத்தார். ‘ஹாரர்’ படங்களில் கவனம் செலுத்தியதால் குழந்தைகளின் அபிமானம் கிடைக்க துவங்கியது.
அதானலே என்னவோ ராகவா லாரன்ஸ் தொடர்ச்சியாக அது போன்ற படங்களிலேயே நடித்து வருகிறார். அவர் இன்று இப்படி ஒரு நல்ல நிலையில் இருக்க காரணமாக முக்கியமான நபர் பற்றிய தகவலை தனது நேர்காணல் ஒன்றில் சொல்லியிருக்கிறார்.
அஜீத் குமார் போன்ற மிகப்பெரிய நடிகர் தனது படத்தின் பாடலில் என்னை போன்ற ஒரு சிறு நடிகனுக்கு வாய்ப்பினை வழங்கிய பெருந்தன்மையை இப்படியான ஒரு இடம் சினிமாவில் கிடைக்க காரணமாக அமைந்ததாக சொல்லியிருக்கிறார்.
அதற்கு அடுத்து வந்த வாய்ப்புகள் எல்லாமே “அமர்க்களம்” பாடலின் வெற்றியை தொடர்ந்தே தானாம். அஜித் குமாருடன் அவ்வளவு நெருக்கமான ஒரு நட்பு தனக்கு இல்லாத போதிலும், தன்னுடைய தற்போதைய வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தவர் அஜீத் என புகழாரம் சூட்டினார் ராகவா லாரன்ஸ்.