என்னது இவரு கதாநாயகனா? என அதிர்ச்சியோடு பார்த்தார்கள் ரசிகர்கள் இவரை. கருப்பான தோற்றமும்,மென்மையான உருவமும் கொண்டிருந்தவர் அவர். நாட்கள் செல்லச்செல்ல அவரது படங்களின் மீது மக்களின் மக்களுக்கு மோகம் திரும்பியது.
நடிகர்,கதாநாயகன் என பார்க்கப்பட்டதை விட நம் பக்கத்து வீட்டில் இருப்பவர் போன்ற தோற்றம் இருக்கிறது என நினைக்க வைத்தவர் முரளி.”இதயம்” முரளி என பெயரை மாற்ற வைக்கும் அளவிற்கு ஹிட்டானது. ஹீரோவுடன் இவர் நடித்த இதயம் படம் அது. முரளியுடன் தான் பணிபுரிந்த அனுபவத்தை சொல்லி இருப்பார் தயாரிப்பாளர் ஜி.ஞானவேலு.
பேச்சு வார்த்தை நடக்கும்போது அப்படி, இப்படி என ஏராளமான கண்டிஷங்களை போடுவாராம். ரொம்ப கரார்ர பேர் வழியாக காட்டிக் கொள்வாராம். ஆனால் சில நாட்களிலேயே அவரே மனமிறங்கி விடுங்க பார்த்துக்கலாம் என சொல்லும் அளவிற்கு மென்மையானவராம்.

அதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தைக்கூட சொல்லியிருப்பார். தனது செருப்பு எங்கே இருக்கிறது தேட நேர்ந்தால், செருப்பை தனது கைகளிலேயே எடுத்துக்கொண்டு வந்து இதுதான் உங்க செருப்பான்னு பாருங்க? என கேட்பவராம் அவர். கதாநாயகனாக இருந்தாலும் அந்தளவுக்கு பந்தா இல்லாத எளிமையான பேர் வழியாம் முரளி. அவர் போல ஒருவரை இனி தமிழ் சினிமாவில் பார்க்க முடியாது மறைந்த முரளியை பற்றி பெருமையாக சொல்லி இருப்பார் தயாரிப்பாளர்.
பூவிலங்கு படத்தின் மூலம் தமிழ் சினிமவிற்குள் நுழைந்தவர் முரளி. பகல் நிலவு படம் இவரை உயர்த்திவிட்டது. இதயம் இவரை உச்சம் தொட வைத்தது. மம்மூட்டியுடன் நடித்த ஆணந்தம் இவரை மேலும் ரசிக்க வைத்தது. காலமெல்லாம் காதல் வாழ்க வெகு நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் முரளியின் பெயரை மீண்டும் சொல்ல வைத்தது.