விஜயகாந்த் பற்றிய தனது நினைவுகள் சொல்லியிருந்தார் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன். கேப்டனுடன் அதிகமாக நெருங்கி பழகும் வாய்ப்பினை பெற்றவர் இவர். விஜயகாந்தால் ஆதாயப்பட்டவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கல் தமிழ் சினிமாவில் என்பது வரை தெரிந்து வைத்திருக்கக்கூடியவர் இவர்.
ஜோதிகா நடித்து வந்த படத்தின் போது நடந்த சுவாரசியமான சம்பவத்தினை நினைவு கூர்ந்திருக்கிறார் மாணிக்கம்.
படப்பிடிப்பு முடிந்து விட்டதாம், பட ரீலீஸ் செய்ய வேண்டியிருந்த வேலைகள் எல்லாம் வேகமாக நடத்தப்பட்டு வந்ததாம். அப்போது ஜோதிகாவிற்கு மட்டும் சம்பளத்தில் பாக்கி கொடுக்கப்பட வேண்டியது இருந்ததாம்.

ஜோதிகாவின் செகரட்ரியாக இருந்தது தங்கத்துரை என்பவராம். இவர் தான் சூர்யாவின் சினிமா பணிகளையும் கவனித்து வந்தாராம்.
ஜோதிகாவிற்கு கொடுக்கப்பட வேண்டிய 6 லட்சம் ரூபாயை கொடுக்க தயாரிப்பாளர் மாணிக்கத்திடம் இல்லாமல் இருந்ததாம். வேறு ஒரு படத்திற்கு கோடி ரூபாய் வரை கொடுத்திருந்ததால் தன்னிடம் பணமில்லாதை பற்றி ஜோதிகாவிடம் சொல்லப்பட்டதாம்.
பணம் வந்த பிறகு ஜோதிகாவின் உதவியாளரை அழைத்து தொகைக்கான செக்கினை கொடுத்தாராம் மாணிக்கம். அதனை வாங்க யோசித்த தங்கத்துரை பணமாக கொடுங்கள் என கேட்டாராம்.
அப்போது பக்கத்தில் இருந்த விஜயகாந்த் அது மாணிக்கம் நாராயாணன் கொடுத்துள்ள செக். அது ரிசர்வ் பேங்க் பணம் மாதிரி அதுல உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம் என சொல்லியதோடு அந்த செக்கிற்கு நான் கேரண்டி என சொன்னாராம்.
விஜயகாந்த் தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை பார்த்து வாயடைத்து போனாரம் மாணிக்கம் நாராயணன். அதோடு மட்டுமல்லாமல் நான் கேரண்டி என சொன்னது தனக்கு கிடைத்தை உச்ச பட்ச மரியாதை எனவும் சொல்லியிருந்தார்.