இன்று பசும்பொன் முத்துராமலிங்கதேவர் அவர்களின் குருபூஜை விழா ஜெயந்தி விழா நடக்கிறது. இதில் முதலமைச்சர் எடப்பாடி, துணைமுதல்வர் ஓ.பிஎஸ் கலந்து கொள்கின்றனர்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் விழாவை தென்மாவட்ட மக்கள் ஒரு பெரிய விழாவாக கொண்டாடுகின்றனர்.
இன்று தேவர் ஜெயந்திவிழாவையொட்டி நடிகர் விவேக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தேசத்தை தெய்வமாகப் பார்த்தவர்; விவேகானந்தரின் சீடரான நேதாஜியை தன் குருவாகக் கொண்டவர்; குடிக்கும் நீர் விலைக்கு வரும், விளை நிலங்கள் வீடுகள் ஆகும் என்று அன்றே எச்சரித்தவர்.மண், பொன்,பெண் ஆசை அற்றவர்; தமிழ்நாட்டின் விவேகானந்தர்!என தேவர் அய்யாவை விவேக் புகழ்ந்துள்ளார்.