நீலிமா ராணி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!
சின்னத்திரை நடிகையான நீலிமா ராணி தமிழ் திரைப்பட நடிகை மற்றும் சின்னத்திரை நடிகை மக்களுக்கு பரீட்சயமானவர். இவர் 1992ம் ஆண்டு நடிகர் கமல் நடித்த தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார், அதற்கு பிறகு பல திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான நடிகையானார்.
மெட்டி ஒலி, கோலங்கள், தென்றல், செல்லமே உள்ளிட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களிலும் முப்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக நான் மகான் அல்ல திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த துணை நடிகைக்கான விருது வென்றார். மேலும் அமளி துமளி, இருவர் உள்ளம், பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட திரைப்படங்களில் கூட நடித்திருக்கிறார்.
இவர் இசைவாணன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார் இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் தற்போது சேலையில் எடுத்துக்கொண்ட சில அழகான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது ரசனைக்கும் உள்ளாகி லைக்ஸ் அள்ளியுள்ளார்.