இசை கலைஞர்கள் சினிமாவை மட்டும் நம்பிக்கிட்டு இருக்க கூடாது… ஏ.ஆர். ரெஹைனா பேட்டி…!

இசை கலைஞர்கள் சினிமாவை மட்டும் நம்பிக்கிட்டு இருக்க கூடாது… ஏ.ஆர். ரெஹைனா பேட்டி…!

இசைக்கலைஞர்கள் சினிமாவை மட்டும் நம்பிக்கொண்டு இருக்கக் கூடாது என்று ஏ ஆர் ரஹைனா கூறி இருக்கின்றார்.

இசை பெயர் ஏஆர் ரகுமானின் சகோதரியும் பிரபல இசையமைப்பாளர் பாடகர் என பன்முகத்தன்மை கொண்டவராக இருந்தவர் ஏ ஆர் ரஹைனா. சினிமாவை தாண்டி சுயாதீன பாடல்களில் கவனம் செலுத்தி வருகின்றார். அவர் குரலில் உருவான ஆல்பம் தான் மாத்திக்கலாம் மாலை என்ற பாடல். மியூசிக் வீடியோ சார்பில் தயாராகி இருக்கும் இந்த ஆல்பத்திற்கு எமில் முகமது என்பவர் இசையமைத்து இருக்கின்றார்.

மனைவி வி. நாயர் மற்றும் நடிகை கோமல் சர்மா நடித்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நடிகை சுகாசினி இயக்குனர் மாதேஷ் பாடகி பாப் ஷாலினி ஆகிய பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது பேசிய ஏ ஆர் ரஹைனா ஹீரோக்களின் படங்களை பார்த்துவிட்டு தான் பாடல்கள் ஹிட் ஆகின்றன.

இப்போது படங்களில் பாடல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டு வருகின்றது. உலகம் முழுவதும் சுயாதீன பாடல்கள் மூலமாக இசைக்கலைஞர்கள் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார்கள். ஆகையால் இங்கே நாம் திரையுலகை சார்ந்து அதை மட்டும் நம்பிக் கொண்டு இருக்கின்றோம்.

பாடல்கள் என்பது சினிமாவில் இருந்தால் என்ன தனி ஆல்பமாக இருந்தால் என்ன ரசிகர்கள் கேட்கத்தான் போகிறார்கள். இந்த பாடலை ரிலீஸ் வீடியோவாக வெளியிடுபவர்களுக்கு பரிசுகள் காத்திருக்கின்றது. மேலும் அதிகம் பார்க்கப்படும் வீடியோவுக்கு பரிசாக இரண்டு பேருக்கு வெளிநாட்டு சுற்றுப்பயணம் செல்லும் வாய்ப்பு உள்ளது என்று அவர் தெரிவித்து இருக்கின்றார்.