கவுண்டமணி என்றதுமே நினைவுக்கு வருவது அவரது கவுண்டரும், நக்கல், நையாண்டியும் தான். பக்கத்தில் நிற்பவர் யார் என்றெல்லாம் பார்க்க மாட்டார். தனது வாயில் வரும் கவுண்டர்களை சராமாரியாக அடித்துத் தள்ளிவிடுவார். அது ரஜினி, கமல் என யாராக இருந்தாலும்.
கமலுடன் இணைந்து பார்த்தவர்களுக்கு வயிறு வலி வரும் அளவிற்கு காமெடியில் கலக்கி நடித்திருப்பார் “சிங்காரவேலன்” படத்தில். சார்லி, மனோ, வடிவேலு என இவருக்கு பக்க பலமாக காமெடியை உச்சகட்டத்திற்கு கொண்டு சென்றிருப்பார்கள். குஷ்பூவை கமல் கிண்டலடிக்கும் சீன்களில் கண்ட்ரோல் பண்ண முடியாத அளவில் தான் இருக்கும் காமெடி.
கவுண்டமணியை பொருத்த வரை அவர் எப்போதுமே ஒன் மேன் ஆர்மி என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் இவர் அதிகமாக பெயர் வாங்கக் காரணமாக அமைந்தது செந்தில் தான். இருவரின் காம்போ இருந்தாலே படம் அல்டிமேட் ஹிட் தான் என சொல்லிவிடலாம். இருவரும் ஏராளமான படங்களில் சேர்ந்தே நடித்திருக்கிறார்கள்.
கவுண்டமணி என்று சொன்னதும் அடுத்த படியாக செந்திலின் பெயர் தன்னாலே நினைவுக்கு வந்து விடும். அப்படி ஒரு கெமிஸ்ட்ரி இவர்கள் இருவரினிடையே இருக்கும்.

“சிங்காரவேலன்” பட ஷூட்டிங் வந்தவர் ஒருவர் கவுண்டமணியிடம் படத்தில் செந்தில் கிடையாதா? அவர் இங்கே இல்லையா? என கேட்டிருக்கிறார். எப்போதும் போல தனது ஸ்டைலில் இந்த இருக்காரே இவரு தான் வெள்ளை செந்தில் என கை காண்பித்து கலாய்த்து தள்ளியிருக்கிறார் கமலை காட்டி. கண்டிப்பாக இவரைத் தவிர யாராலும் இப்படி சொல்ல முடியுமா? கமலைப்பற்றி என நினைத்துக் கூட பார்க்க முடியாது.