தமிழ் சினிமாவில் ஆயிரம் கணவுகளை சுமந்து கொண்டு சாதித்தே ஆகவேண்டும் என்ற ஆசையில் அதுவரை தான் பார்த்து வந்த வேலைகளை கூட விட்டு விட்டு அதிக கஷ்டங்களை அனுபவித்து, தங்களது எண்ணம் ஈடேறாமல் சினிமாவை விட்டு தான் பார்த்து வந்த பழைய வேலையை தேடி மீண்டும் சென்றவர்களும் உண்டு.
இப்படிப்பட்ட ஒரு தருணத்தை சூப்பர் ஸ்டார் சந்தித்து உள்ளார் என்றால் அதை நம்மால் நம்பமுடியுமா?. பஸ் கண்டக்டராக இருந்து சினிமா மீது கொண்டிருந்த ஆர்வத்தாலும், தனது நண்பர்களின் வற்புறுத்தலாலும் நடிக்க வந்தவர் ரஜினிகாந்த் என்பது ஊர் அறிந்த உண்மை.

சினிமாவில் வாய்ப்பு தேடித்தேடி அது கிடைக்காமல் மீண்டும் தான் பார்த்து வந்த கண்டக்டர் வேலையயே பார்க்கலாம் என ரஜினி கிளம்பி விட்டாராம் ஒரு நேரத்தில்.
தான் பணிபுரிந்த பஸ் கம்பெனிக்கு போன இடத்தில் தான் காத்திருந்தது ரஜினிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி. வேலையை ராஜினாமா செய்யாமல்ம் முறையான தகவ்ல் சொல்லாமல் நீண்ட நாட்கள் விடுப்பு விடுத்திருந்த ஊழியர்களை வேலையை விட்டே தூக்கி விட்டதாம் பஸ் கம்பெனி நிர்வாகம். இந்த பட்டியலில் சிவாஜி ராவ் கெய்க்வாட் பெயரும் இருந்ததாம்.
மொத்ததில் இதுவும் போச்சு, அதுவும் போச்சு, கோவிந்தா கோவிந்தா என நினைத்த ரஜினி எதற்கும் கோடம்பாக்கத்தில் இன்னொரு ரவுண்டு அடித்து பார்த்து வாய்ப்பு கிடைக்குமா? என பார்க்கலாம் என நினைத்திருக்கிறார்.
அதே போல ரஜினிக்கு வாழ்வு கொடுத்தது அவரது இரண்டாவது இன்னிங்ஸ் தான் என்று கூட சொல்லலாம். அதற்கு முக்கிய காரணம் கே.பாலசந்தர் அவருக்கு அடுத்த படியாக எஸ்.பி. முத்துராமனை சொல்லலாம். ரஜினியை வைத்து அதிகமான படங்களை இயக்கிய இயக்குனர் அல்லவா அதனால்.
அதே போல ரஜினியின் நீண்ட நாள் விடுப்பினை கணக்கிட்டு அவரை பணி நீக்கம் செய்த பஸ் கம்பெனியும் கூடத்தான என சொல்லலாம். அவர்கள் மட்டும் தவறை மண்ணித்து மறுபடியும் வேலை கொடுத்திருந்தால் இந்தா சூப்பர் ஸ்டாரை பார்த்திருக்க முடியாமலே போயிருக்கும் அல்லவா?.