அஜீத்தை வைத்து “வில்லன்”, “வரலாறு” போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர் கே.எஸ்.ரவிக்குமார். விஜயை வைத்து கூட ஒரே ஒரு படத்தினை எடுத்திருக்கிறார். கமல், ரஜினி, சரத்குமார் இவர்களின் வெற்றிப்படங்களை இயக்கியவர்.
சமீபத்தில் ரீ-ரிலீஸ் படங்கள் பற்றிய தனது கருத்தினை சொல்லியிருக்கிறார். பெரிய நடிகர்களின் படங்கள் வெளிவரும் போது இது போன்ற ரீ-ரிலீஸ் கதையெல்லாம் நடக்காது. ஏனென்றால் எல்லருக்கும் தெரியும் பெரிய நடிகர்கள் படங்கள் வந்தால் அதை தான் முதலில் பார்க்க வேண்டும் என்று எல்லோரும் நினைப்பார்கள்.
படத்தின் முதலாளி தயாரிப்பாளர் தான். அவர் தான் முடிவு செய்ய வேண்டும் தங்களது பழைய படங்களை ரீ-ரிலீஸ் செய்யலாமா? வேண்டாமா? எனபதை. இது மாதிரி மறு வெளியீடு படங்களின் டிக்கெட் விலை சற்று குறைவாகத்தான் இருக்கும். இது அதிகமானவர்களை படம் பார்க்க வைக்கும்.

அது திரையரங்கு உரிமையாளர்களுக்கு நல்லதுதான். தியேட்டர் கார் பார்கிங்கிலிருந்து கேன்டீன் வரை வருமானத்தை தான் கொடுக்கும் என்றார். அதே போல ரீ-ரிலீஸ் படங்கள் எல்லாமே ஹிட் ஆகி கலெக்ஷனை பெற்று தராது. ஒரு சில படங்களால் மட்டுமே இது முடியும், எல்லா படங்களும் “கில்லி” கிடையாது என சொல்லியிருக்கிறார். “கில்லி”யை போலே தான் “தீனா”, “பில்லா” படங்களும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. “கில்லி” மாதிரி வராது என சொன்னவர்.
அஜீத் படங்களை பற்றி ஏன் பேசவில்லை என கேட்டு வருகின்றனர் அஜீத் ரசிகர்கள். அஜீத்தை வைத்து இவர் இயக்கிய “வரலாறு” தேசிய விருது பெரும் என எதிர்பார்க்கப்பட்டது. இப்படி இருக்கையில் இவர் விஜய் படத்தினை மட்டும் பெரிதாக பேசியிருப்பது கொஞ்சம் யோசிக்க வைத்துள்ளதோ?…