கே.எஸ்.ரவிக்குமார் தமிழ் சினிமாவில் அதிக வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்களில் ஒருவர். ரஜினி, கமல், அஜீத், விஜய் இன்னும் சொல்லப்போனால் நடிகர் திலகம் சிவாஜி கணேசனையே வைத்து படங்களை இயக்கியவர். கமர்ஷியல் படங்களை மட்டுமே அதிக டார்கெட்டாக வைத்து களமிறமங்குபவர் ரவிக்குமார்.
அதோடு அதில் வித்தியாசங்களையும் காட்டுவதிலும் வல்லவர் இவரே. உதாரணமாக இவர் இயக்கிய “வில்லன்”,”வரலாறு” படங்களை சொல்லலாம். கதாநாயகன் அஜீத் இந்த இரண்டு படங்களிலும் நடித்த விதம் அனைவரையும் அசர வைத்தது.
கமர்ஷியல் கதை களமாக இருந்தாலும் படத்தில் நடித்தவர்களின் நடிப்பு திறமைக்கு சவால் விடும் கேரக்டர்களை அதிகமாக வைத்திருப்பார்.
கமல்ஹாசனின் நம்ப முடியாத நடிப்பில் வெளியான “தசாவதாரம்” படத்தை இயக்கியது இவரே. படத்தை எப்படி எடுத்து முடிக்கப்போகின்றோம் என்ற பயம் தனக்குள்ளே இருந்ததாக சொல்லியிருந்தார்.

கமல் கொடுத்த உற்சாகமும், நம்பிக்கையும் தான் படத்தில் சுறுசுறுப்பாக பணியாற்ற வைத்ததாகவும் குறிப்பிட்டார். படத்திற்காக பதினைந்து விதமான கெட்-டப்களை வைத்து ஒத்திகை பார்க்கப்பட்டதாம். இறுதியாக அது பத்து கெட்-டப்பில் முடிந்ததாம்.
ஷங்கர் படம் போல நினைத்து பிரம்மாண்டமாக எடுக்கலாம் என்ற எண்ணத்தில் பணிகளை துவக்கினாராம். படத்தின் பட்ஜெட் நாளுக்கு நாள் எகிறிக்கொண்டே போக போக பயம் கொடுத்ததாம்.
தனக்குத்தானே சூடு போட்டு கொண்ட கதையாக மாறிவிடுமோ என நினைத்தாராம் துவக்கத்தில். ஆனால் படம் வெளியாகி கிடைத்த வெற்றியை பார்த்த பிறகு தான் ரவிக்குமாருக்கு நம்பிக்கை பிறந்ததாம். “தசாவதாரம்” படத்தின் வெற்றிக்கு கமல்ஹாசனுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் என சொல்லியும் இருந்தார்.