Latest News
தூக்கி அடித்த துரைசிங்கம் அலற வைத்த ஆறுச்சாமி…ஹரி வைத்த சஸ்பென்ஸ்?…?…
அதிரடி, ஆக்சன் படங்களை எடுத்து பெயர் பெற்றவர் இயக்குனர் ஹரி. படம் துவங்குவதும் தெரியாது, முடிவதும் தெரியாது என்ற அளவுக்கு வேகமான திரைக்கதையை கொண்டு அவரது படங்கள் வெளிவந்திருக்கும். இவருடைய திரை வாழ்வில் மிக முக்கியமாக அமைந்த படங்கள் விக்ரம் நடித்த “சாமி”, சூர்யா நடித்த “சிங்கம்”. இவை இரண்டும் அடுத்தடுத்த பாகங்களாக வெளியிடப்பட்டுள. இவர் தனுஷ், சரத்குமாரை வைத்தும் வெற்றி படங்களை கொடுத்துள்ளார் ஹரி.
“சாமி”, “சிங்கம்” படங்களில் வந்த நாயகர்கள் போலீஸ்காரர்களாக நடித்திருப்பர். முந்தைய படத்தின் நாயகர்களை அடுத்த படத்தில் ஒரு காட்சியிலாவது வர வைப்பது தற்போது ‘பேஷன்’ஆகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இதை அவரது படங்களில் செய்து வரும் நேரத்தில் ஆறுச்சாமியும், துரைசிங்கமும் ஒரு படத்தில் இணைவார்களா? என்ற கேள்விக்கு சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்து இருக்கிறார் இயக்குனர் ஹரி.
இது போன்ற ஒரு ஐடியா தனக்கு “சிங்கம் – 3” எடுக்கும் பொழுது வந்ததாம். ஒரு காட்சியில் துரை சிங்கத்தின் மனைவி வந்து ஆறுச்சாமியிடம் இன்னும் நீங்க பெருமாள் பிச்சையை தேடிக்கொண்டு தான் இருக்கீங்களான்னு? கேட்க, விஷயம் தெரிந்த ஆறுச்சாமியும், துரைசிங்கமும் ஒருவரை பார்த்து சிரிப்பது போல காட்சிவைக்க திட்டமிட்டு, சூர்யாவிடம் சொல்ல அவர் எதுவும் சொல்லவில்லையாம்.
இந்த காட்சியை படத்தில் வைக்க சிரமம் இருந்தால் வைக்க முடியாமல் போனதாம். ‘கமர்சியல்’ படங்கள் கொடுக்கும் பொழுது அனைவருக்கும் சரியான முக்கியத்துவம் கொடுத்தால் தான் அந்த படம் வெற்றியடையும் என்றார். சூர்யாவுடன் இணைவதற்கு மீண்டும் தயாராக நான் இருக்கிறேன். ஆனால் இது குறித்து சூர்யா தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் அவரது பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார். இவர்கள் இருவரும் இனைந்த படங்கள் பேசும் படியான வெற்றிகளை பெற்றுள்ளது இதுவரை.