vairamuthu vijay
vairamuthu vijay

புலி படத்தில் காட்டப்பட்ட புதுமை!…வித்தியாசம் காட்டிய வைரமுத்து….அட இத நோட்டீஸ் பண்ணவே இல்லையோ?…

விஜய் படங்கள் என்றாலே பாடல்கள் மீதும் அதிக எதிர்பார்ப்பு இருந்தேயிருக்கும். விஜயின் ஸ்பீடான டான்ஸ் மூவ்மென்ட்ஸ்க்கு ஏற்றார் இருக்கிறதா?. வரிகள் வெறியேத்த வைக்கிறதா கேட்ட  ரசிகர்களை என பாடல்கள் மீது அதிக ஆவல் இருப்பது தொடர்கதையாக தான் இருக்கிறது. “புலி” விஜயின் தோல்வி படத்தில் ஒன்றாகக்கூட சொல்லிக்கொள்ளலாம். கலெக்ஷன், ஓடிய நாட்கள் என்று பார்த்தால் “புலி” பின்னடைவை தான் சந்தித்திருந்தது.

ஆனாலும் படத்தை விட பாடல்கள் அதிக ரீச் பெற்றிருந்தது. ஸ்ருதிஹாசன் ஜோடியாக நடித்திருந்தார் விஜய்க்கு. வைரமுத்து எழுதிய வரிகளிக்குத்தான்  விஜய் – ஸ்ருதி இருவரும் பெர்ஃபார்மன்ஸ் கொடுத்திருப்பார்கள். தேவி ஸ்ரீபிரசாத் இசையில் ரசிக்க வைத்த பாடல்கள் இவை. தமிழ் இலக்கியத்தில் ‘அந்தாதித்தொடை’யின் கீழ் எழுதியிருந்தார் வைரமுத்து. ஆறு பாடல்கள் மொத்தமாக இந்த படத்தில் இடம்பெற்றிருந்தது.

puli
puli

பாடல் துவக்கத்தில் வரும் சொற்கள் எல்லாம் இரு முறை வந்திருந்தது. ‘ஜிங்கிலியா ஜிங்கிலியா’, ‘எங்க மக்கா எங்க மக்கா’, ‘மனிதா மனிதா’, ‘ஏன்டி ஏன்டி’, ‘சொட்டவால சொட்டவால’, ‘மன்னவனே மன்னவனே’ இப்படியே எழுதப்பட்டிருந்தது. பாடலை கேட்டவர்கள் இதனை கவனித்திருந்திருப்பார்களா என்பது சரி வர தெரியாது. ஆனால் அப்படி இதனை இதுவரை கவனிக்காதவர்கள் அடுத்தா முறை கேட்கும் போது பாடல்கள் இப்படியா எழுதப்பட்டுள்ளது என்பதனை ஆச்சரியத்துடன் கூட பார்க்கலாம்.

கவிஞர்கள், பாடலாசிரியர்கள் இது போல நினுக்கத்தை காட்டுவதே அவர்களின் தனிச்சிறப்பை காட்டுகிறது. வைரமுத்து இத்தனை ஆண்டுகளாக எப்படி அதே உயரத்தில் இருந்து வருகிறார் என்பது இதனால் தானோ?. இவருடன் சமகாலத்தில் தங்களது பயணத்தை துவங்கியவர்களில் நிறைய பேர் இன்று சினிவாவிலேயே இல்லை.