தாய்மாமன் சீர் செய்த தனுஷ்-செல்வராகவன் திருமலையில் தரிசனம்

தாய்மாமன் சீர் செய்த தனுஷ்-செல்வராகவன் திருமலையில் தரிசனம்

துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் திரைஉலகில் அறிமுகமாகி, இன்று பல்வேறு மொழிகளிலும் முன்னனி நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கிறார் நடிகர் தனுஷ்.

நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என்று அனைத்து துறையிலும் ஒரு கலக்குகலக்கி வருகின்றார். இவர் இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் இரண்டாம் மகனாவார், இயக்குநர் செல்வராகவன் கஸ்தூரி ராஜாவின் மூத்த மகன். மேலும் இவர்களுக்கு விமலா கீதா, கார்த்திகா என்ற இருசகோதிரிகள் உள்ளனர்.

https://www.instagram.com/p/B9j3gxCjwJR/?utm_source=ig_embed&utm_campaign=loading

சமீபத்தில் இவர்கள் குடும்பத்துடன் திருமலை திருப்பதிக்கு தரிசனத்துக்காக சென்றுள்ளனர், அதனை குறித்து தனுஷின் தங்கை கார்த்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் மகனின் இருதாய்மாமன்களும் தங்கள் கடமையை சீர்றும் சிறப்புமாக நிறைவேற்றியுள்ளதாக நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.