கிளி மூக்கு ராமசந்திரன் காமெடி நடிகராக இருந்து வருகிறார். விவேக்குடன் இவர் நடித்த காமெடி காட்சி ஒன்று எல்லோருக்கும் நினைவிருக்கும். காக்கா பிரியானி சாப்பிட்டா காக்கா குரல் வராம, உன்னி கிருஷ்ணன் குரலா வரும்னு கேட்டிருப்பார். அதிக ரீச் ஆனது இந்த காமெடி. தனுஷ் படத்திலும் கூட நடித்திருந்தார்.
இப்போது பெரிய அளவில் படங்கள் ஏதும் இன்றி இருந்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் எந்த முன்னனி ஹீரோக்களின் படங்கள் எதை பார்த்தாலும் அதில் ராமச்சந்திரன் நடித்திருப்பார்.
விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து பேசியிருக்கிறார் இவர். இப்போது உள்ள சூழ்நிலையில் அரசியலில் வெற்றி பெறுவது என்பது எல்லாம் மிகவும் சிரமம் தான். எல்லாராலையும் இலக்கை அடைந்து விட முடியாது.
மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணமிருப்பவர்கள் எல்லாரும் தன்னுடன் பணியாற்றும் சக தொழிலாளர்களுக்கு உதவ முன் வர வேண்டும் என சொல்லியிருக்கிறார்.

கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குபவர்கள் தங்கள் படங்களில் வேலை செய்யும் டெக்னீஷியங்களில் நிறைய பேர் குழந்தைகளுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட முடியாமலும், மருத்துவ செலவிற்கு பணமில்லாமலும், ஏன் சிலருக்கு அன்றாட செலவுகளுக்கே காசில்லாமல் தவித்து வருகிறார்கள்.
முதலில் அவர்களுக்கு உதவி செய்ய முன்வாருங்கள் என சொல்லியிருக்கிறார்.காமெடியன்கள் எல்லாம் இப்போது ஹீரோக்களாக மாறி வருவது குறித்து பதில் சொன்ன ராமசந்திரன்.
யார் வேண்டுமானாலும் ஹீரோவாகலாம். மக்களை சிரிக்க வைப்பது மிகவும் சிரமம். ஆனால் ஹீரோயிசத்தை யார் வேண்டுமானாலும் ஈஸியாக செய்து விடலாம் என சொல்லியிருக்கிறார்.