கவுண்டமணியுடன் காமெடி கேரக்டரில் நடித்திருந்தவர் ஷகிலா. அதன் பின்னர் கவர்ச்சி வேஷங்களையே அதிகமாக தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கினார். ‘ஏ'(A) சர்டிபிகேட் படங்களில் மட்டும் தான் இவரை பார்க்க முடியும் என்ற நிலையும் இருந்து வந்தது. அதுவும் அதிகமாக மலையாள படங்களிலேயே தான்.
‘பயில்வான்’ரெங்கநாதன் ஒரு காலத்தில் அடியாள் வேடங்களில் நடித்தார். காமெடியனாகவும் நடித்திருந்தார். இப்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
அதே போல ‘யூ-டியூப்’ சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார் இவர். பயில்வான் கொடுக்கும் கன்டென்ட்கள் எல்லாமே சர்ச்சையை கிளப்பும் விதமாகவே பார்க்கப்படுகிறது.
நடிகர், நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கை பற்றி இவர் பேசியிருந்தது அதிக முறை மிகப்பெரிய சர்ச்சைகளாக வெடித்திருக்கிறது.

சமீபத்தில் ஷகிலா – பயில்வான் ரெங்கநாதன் இருவரும் பங்கேற்ற தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் அதிர்ச்சியை கிளப்பும் விதாமான செய்தியை சொல்லி விட்டார் ஷகிலா. பயில்வானின் மகளின் காதல் பற்றிய திடுக்கிடும் தகவல் தான் அது.
அதிலும் அவர் பெண் ஒருவரை விரும்புகிறார் என பேசியது அதிர்ச்சியில் உறைய வைத்தது நிகழ்ச்சி பார்த்தவர்களை.
‘ப்ளூ’ ஃபிலிம் நடிகையான ஷகிலா தனது மகளை பற்றி பேசியது வருத்தமாக இருந்ததால் மகளின் நிச்சயதார்த்தை விரைவாக நடத்தி விட்டாராம். தனது நெருங்கிய உறவினரான சிவாவுடன் தனது மகளை திருமணம் செய்து வைக்க நினைத்தவர் அவர்கள் இருவரின் திருமண தேதியை வெளியிட்டுள்ளார்.
அதே போல இவர்கள் இருவரின் திருமணம் வருகிற செப்டம்பர் மாதம் 15ம் தேதி நடக்க உள்ளது என சொல்லி ஷகிலா கிளப்பி விட்ட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தி விட்டார். இதே போல தனது சேனலில் பிறரை பற்றி விமர்சிக்கும் விதத்தை மாற்றிக்கொள்வாரா? என்ற கேள்வியும் கிளம்பி விட்டதாமே?.