திருமணத்திற்கு பின் செய்தி வாசிக்க வந்த சன் தொலைக்காட்சி செய்திவாசிப்பாளர் அனிதா சம்பத்தின் புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வருபவர் அனிதா சம்பத். இவரின் தமிழ் உச்சரிப்பு, வாசிப்பு மற்றும் அழகு காரணமாக இவருக்கென பல ரசிகர்கள் உள்ளனர். இவரின் டிவிட்டர் பக்கத்தை 42 ஆயிரம் ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு திடீரென அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தனது திருமண புகைப்படங்களை வெளியிட்டு அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
அதன்பின் தற்போது திருமணத்திற்கு பின் செய்தி வாசிக்க வந்தேன் எனக்கூறி ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். ஆனால், அவரின் கழுத்தில் தாலி இல்லை. எனவே, இதைக்கண்ட நெட்டிசன்கள் உங்கள் கழுத்தில் தாலி எங்கே, நெற்றியில் குங்குமம் எங்கே என கேள்விகளால் துளைத்து வருகிறார்கள்.
திருமணத்திற்கு பிறகு சன் டிவியில் முதல் முறை செய்தி வாசித்தேன் 😍 pic.twitter.com/R4OolEa4w5
— Anitha Sampath (@anithasampath_) September 17, 2019