Shalini Ajith
Shalini Ajith

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு!…கண்ணீர் வர வைத்த அஜீத் ஷாலினி அன்பு!…

திரை உலகில் காதலித்து திருமணம் செய்து கொண்ட வெற்றிகரமான தம்பதியர் பட்டியலில் முக்கிய இடம் வகிப்பவர்கள் அஜீத் -ஷாலினி தம்பதியர். “அமர்க்களம்” படத்தில் நடித்து வந்த போது தான் இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

தனது காதலை ஷாலினியிடம் வெளிப்படுத்த அஜீத் எப்படியெல்லாம் முயன்றார் என சுவாரசியமான தகவலை அந்த படத்தின் இயக்குனர் சரண் சொல்லியிருந்தார்.

காதல் கைகூடி இருவரும் கணவன் – மனைவியானார்கள். அதன் பின்னர் சினிமாவிலிருந்து முழுவதுமாக ஒதுங்கிவிட்டார் ஷாலினி. அன்பான இந்த தம்பதியருக்கு அனோஷ்கா, ஆத்வீக் என ஒரு மகளும், மகனும் இருக்கின்றார்கள். அஜீத் தற்போது “விடாமுயற்சி”, “குட் பேட் அக்லி” என இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

தீபாவளிக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் “விடாமுயற்சி” படத்தின் இறுதி கட்ட ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் மிக வேகமாக நடந்து வருகிறது. படப்பிடிப்பில் கலந்து கொள்ள அஜீத்தும் அஜர்பைஜான் சென்றிருந்தார்.

இந்நிலையில் உடல் நல பிரச்சனையின் காரணமாக ஷாலினிக்கு அறுவை சிகீட்சை நடந்துள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. பட ஷூட்டிங் பணிகள் நடந்து வருவதால் அஜீத் ஆப்பரேஷன் நேரத்தில் ஷாலினியுடன் இருக்க முடியாமல் போனதாக பேசப்பட்டது.

Ajith Shalini
Ajith Shalini

இந்நிலையில் தனது காதல் மனைவியை பார்க்க அஜீத் அஜர்பைஜானிலிருந்து பறந்து வந்திருக்கிறார். மருத்துவமனையில் தனது கைகளை பிடித்த படி இருக்கும் அஜீத்தின் ஃபோட்டோவை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஷாலினி.

அஜீத் – ஷாலினியின் இந்த அன்பை பார்த்து நெகிழ்ந்து போயிருக்கிறார்கள் அஜீத் ரசிகர்கள். அதோடு ஷாலினி விரைவில் உடல் நலம் பெற்றி வீடு திரும்ப வேண்டும் எப்ன பிரார்த்தனைகளையும் செய்து வருகின்றார்கள்.

படப்பிடிப்பு குழுவோடு மீண்டும் இணைய அஜீத் அஜர்பைஜானுக்கு ஓரிரு நாட்களில் சென்று விடுவார் என செய்திகள் சொல்லுகிறது.