நடிகை ஸ்ரீரெட்டி, தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உள்ள அனைத்து பிரபலங்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் என அனைவரும் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி மிகவும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டு வருகிறார். நாளுக்கு நாள் இவரின் அட்டகாசங்கள் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டே இருக்கிறது.

இதனை தொடர்ந்து இவர் பழையபடி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸை வம்புக்கு இழுத்துள்ளார். அதில் பெண்களை திருட்டுதனமாக படுக்கைக்கு அழைப்பது போல பலரின் கதைகளையும் திருடிக் கொண்டு வருகிறார். இவங்களெல்லாம் தமிழ் சினிமாவில் ரொம்ப பெரிய இயக்குனர்களா? என்று நக்கல் அடித்துள்ளார்.

இதனைக் பார்த்த் ஃபாலோவெர்ஸ் சிலர், தமிழ் சினிமா பற்றி என்னதான் உன் மனசுல நினைச்சுட்டு இருக்கீங்க, ஒழுங்கா தமிழ்நாட்டை விட்டு ஓடிப் போயிடு, உனக்குயெல்லாம் வேற வேலையே இல்லையா? என்று வாய்க்கு வந்தபடி திட்டி உள்ளனர். என்னதான் ஸ்ரீரெட்டி தினமும் ஏதாவது வம்பு சண்டை இழுத்து வந்தாலும், தெலுங்கிலும் தமிழிலும் யாரும் அவருக்கு வாய்ப்பு கொடுப்பதாக தெரியவில்லை.