ராகவா லாரன்ஸ் மேல நம்பிக்கை இருக்கு

ராகவா லாரன்ஸ் மேல நம்பிக்கை இருக்கு – ஸ்ரீரெட்டி ஓப்பன் டாக்

நடிகர் ராகவா லாரன்ஸ் தனக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுப்பார் என நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.

ராகவா லாரன்ஸ், முருகதாஸ் உள்ளிட்ட பலர் மீதும் பாலியல் புகார்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி. அதன்பின் ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு கொடுப்பதாக ராகவா லாரன்ஸ் அறிவித்தார். இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த ஸ்ரீரெட்டி ‘ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா 3 வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. தற்போது அவர் காஞ்சனா ரீமேக்கை இயக்க பாலிவுட்டுக்கு சென்றுவிட்டார். எனவே, அவரின் அடுத்த படத்தில் நடிக்க எனக்கு கண்டிப்பாக வாய்ப்பு கொடுப்பார் என நம்புகிறேன்’ என தெரிவித்தார்.