தமிழ் சினிமாவின் கலைஞர்களில் பலர் நடிப்பை தவிர தங்களை பெருக்கிக்கொள்ள வேறு தொழில்களையும் செய்து வருகின்றார்களாம். இங்க பணம் வரலேன்னா என்ன, அங்க சம்பாதிச்சிக்கிடலாம்ன்னு தான் போல. இப்படி தமிழ் சினிமாவில் முன்னனிகளாக வலம் வந்து தற்போது பட வாய்ப்புகள் இல்லாமலேயோஅல்லது வேறு காரணங்களால் தங்களது மற்றொரு தொழிலை கவணித்தும் வருகின்றார்கள். சொல்லி வைத்தது போல பலர் தங்களது வியாபாரமாக உணவு விடுதி அதாவது ஹோட்டல் தொழிலை செய்து வருகின்றார்கள்.

தயாரிப்பாளர் ஆர்.பி.செளதிரியின் மகனும் ஹீரோவாக ஒரு சில படங்களில் தலை காட்டி இப்போது வாய்ப்புகள் அதிகாமாக் இல்லாமல் இருப்பவர் ஜீவா. இவர் சென்னை தியாகராயா நகரில் ‘ஒன்-எம்.ஃபி’ என்ற பெயரில் ரெஸ்டரன்ட் நடத்தி வருகிறார். ஜீவாவின் உற்ற நண்பரும் தற்போதைய தமிழ் சினிமாவில் கவணிக்கப்பட வேண்டிய ஹீரோக்களில் ஒருவருமான ஆர்யாவும் இதே போல தான் ஹோட்டல் ஒன்றினை நடத்தி வருகிறார். ‘சீ-ஷெல்’ என்பது தான் இவரது உணவு விடுதியின் பெயர்.
தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் வாங்க சாப்பிடலாம் என்ற பெயரில் தனது ஹோட்டல் வியாபாரத்தை நடத்தி வருகிறார். நகைச்சுவை நடிகர்களில் முக்கியத்துவம் பெற்றவரான கருனாஸ் திண்டுக்கல்லில் ‘கருனாஸின் ரத்னா விலாஸ்’ என்ற பெயரில் தனது ஹோட்டலை நடத்தி வருகிறார். காமெடியனாக கலக்கி ஒரே நாளில் ஹீரோவாக மாறி தமிழ் திரைஉலகத்தையே திரும்பிபார்க்க வைத்த சூரியும் நடிப்பு தொழிளோடு சேர்த்து மதுரையிலும், சென்னையிலும் ‘அம்மன்’ என்ற பெயரில் ஹோட்டல் தொழிலை நடத்தி வருகிறார்.
இந்த நடிகர்களின் ஹோட்டலிகளில் சூரியின் ‘அம்மன்’ மட்டும் பலராலும் உற்று நோக்ககூடியதாகத்தான் இருப்பதாக பேசப்படுகிறது. அவரது கடை திறக்கப்பட்ட சமயத்தில் இதை பற்றிய செய்தி வெளியாகி வைரல் ஆனது. படங்களில் வாய்ப்பு குறைந்தால் என்ன இது பாஸ்ட் ஃபுட் காலம் அதனால் நாங்க இந்த தொழிலையும் செய்வோம்ன்னு வைராக்கியத்தோட களம் இறங்கியிருக்காங்க.