“ரோஜாக்கூட்டம்” படத்தின் மூலம் அறிமுகமானார் ஸ்ரீகாந்த். முதல் படமே மெகா ஹிட். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி வந்தது. தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியில் நல்ல இடத்திற்கு விடுவார் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டது.
“ஏப்ரல் மாதத்தில்” படத்தில் சினேகாவுடன் இணைந்து நடித்தார். “பார்த்திபன் கணவு” படம், “போஸ்”, “பம்பரக்கண்ணாலே” என வரிசையாக படங்களில் நடித்தார்.
மிகப்பெரிய ஹிட் கொடுப்பார் என எதிர்பார்க்கபட்ட நேரத்தில், ஆவரேஜ் ப்ளாப் என ஏற்ற இறக்கங்களோடு போய் கொண்டிருந்தது இவரது கேரியர். “நண்பன்” ஷங்கர் இயக்கத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்தார்.
படத்தில் இவருக்கும் முக்கியமான ரோல் கிட்டத்தட்ட படம் முழுவதுமே விஜயுடன் வருவார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்.அதற்கு பிறகு பேர் சொல்லும் படியாக படங்கள் எதுவும் இவருக்கு வரவில்லை.

இது பற்றிய கேள்விக்கு பதில் சொல்லிய ஸ்ரீகாந்த். எல்லார மாதிரித்தான் நானும் நடிக்கிறேன். அவங்க போடுற மாதிரித்தான் நானும் எஃபர்ட்ஸ் போடுறேன். ஆனா எனக்கு ஏன் சான்ஸ் கிடைக்க மாட்டேங்குதுன்னு எனக்கும் தெரியலன்னு சொல்லியிருக்கிறார்.
படம் நடிக்க வந்த நேரத்தில் இவருக்கு என்ன ரெஸ்பான்ஸ் இருந்ததோ அதே தான் “நண்பன்” படத்திலும் இருந்தது என்று கூட சொல்லலாம். ஆனால் அதன் பிறகு ஸ்கிரீனில் இவரை பார்ப்பது ரேராகி விட்டது.
விஜயுடன் நடிக்க அடித்த லக் மாதிரி வேற ஹீரோக்களுடன் காம்போ கிடைத்தாவது அவர் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்பதுவே ஸ்ரீகாந்த் ரசிகர்களின் ஆசையாக இருந்து வருகிறது. “நண்பன்”படத்தில் ஸ்ரீகாந்த்துடன் நடித்த ஜீவாவிற்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைப்பது அரிதாகி விட்டது.