கார்த்தி நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் தேவ், அந்த படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் ‘கைதி’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்தில், ஹீரோயின் இல்லை எனவும், ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் எனவும் தெரிகிறது.த்ரில்லர் கதை கலத்தை கொண்ட இப்படம், ஒரு இரவு நடக்கும் நிகழ்வை சொல்வதாகவும் தெரிய வந்துள்ளது.
இப்படத்தை ‘ட்ரீம் பிக்சர்ஸ்’ சார்பில் எஸ்.ஆர் பிரகாஷ் பிரபு, எஸ்.ஆர். பிரபு தயாரித்துள்ளனர். இதன் ஃபர்ஸ்ட் லுக்கை திரைப்படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.இந்த படத்தை அடுத்து கார்த்தி, பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அதில் தெலுங்கு நடிகை ராஷ்மிகா நடிக்கவுள்ளார். இவர் நடித்த கீதாகோவிந்தம் மக்களிடையே வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.