தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் இன்று ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருக்கின்றது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகின்றது. மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்படுகின்றது. நேற்று முன்தினம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 282 ஆக உயர்ந்திருக்கின்றது.
மேலும் உயிரிழப்பின் எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகின்றது. தொடர்ந்து மீட்பு பணியில் ராணுவம், போலீசார், தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகிறார்கள். மூன்றாவது நாளாக இன்று காலை முதலே பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மேலும் கேரளாவில் கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய பகுதிகளில் ரெட் அலர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதுதொடர்ந்து அப்பகுதிகளில் மலைப் பொழிவு அதிகமாக இருக்கும் என தெரிவித்திருக்கின்றது. தமிழக மற்றும் கேரளாவுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் இன்று ஒரு சில இடங்களில் 7 முதல் 11 சென்டிமீட்டர் மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றதாக தெரிவித்திருக்கின்றது.