தற்கொலை முயற்சி, தண்டவாளத்தில் படுத்து தூங்கிய பெண்… நொடி பொழுதில் நடந்த ட்விஸ்ட்… வைரல் வீடியோ…!

தற்கொலை முயற்சி, தண்டவாளத்தில் படுத்து தூங்கிய பெண்… நொடி பொழுதில் நடந்த ட்விஸ்ட்… வைரல் வீடியோ…!

குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை முயற்சி செய்த பெண் ஒருவர் தண்டவாளத்தில் படுத்து தூங்கிய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

பிகார் மாநிலத்தின் கிழக்கு சம்பாரன் மாவட்டத்தில் உள்ள மோதிஹறியில் இருந்து முசாபர் வரை சென்று கொண்டிருந்த ரயிலை அதன் லோகோ பைலட் திடீரென நிறுத்தினார். இதற்கு காரணம் பெண் ஒருவர் தண்டவாளத்தில் படுத்து கொண்டிருந்ததை அந்த லோகோ பைலட் பார்க்க பின்னர் அவசர பிரேக்குகளை பயன்படுத்தி சரியான நேரத்தில் ரயிலை நிறுத்தினார்.

லோகோ பைலட் துரிதமாக செயல்பட்டு ரயிலை நிறுத்தியதால் தற்கொலைக்கு முயற்சி செய்த பெண் காப்பாற்றப்பட்டார். ரயிலை நிறுத்தியதும் சகப்பயணிகள் கீழே இறங்கினர். அப்போது தற்கொலைக்கு முயன்ற பெண் தண்டவாளத்தில் உறங்கிக் கொண்டிருந்தார். அவரை எழுப்பிய பயணிகள் அவரிடம் விசாரணை செய்தார்கள்.

அப்போது குடும்ப பிரச்சினை காரணமாக மனதில் அழுத்தத்தில் இருந்ததாக அந்த பெண் கூறியிருந்தார். தனது காதலை குடும்பத்தார் ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார். இத்தோடு என்னை ஏன் காப்பாற்றினீர்கள் நான் சாகவேண்டும் என்று அவர் அழுதுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதள பக்கங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.