வயநாடு நிலச்சரிவு… வி.ஐ.டி பல்கலைக்கழகம் சார்பாக ஒரு கோடி நிதி உதவி…!

வயநாடு நிலச்சரிவு… வி.ஐ.டி பல்கலைக்கழகம் சார்பாக ஒரு கோடி நிதி உதவி…!

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ஒரே இரவில் பல 100 மக்கள் மண்ணோடு மண்ணாக புதைந்து போயினர். தற்போது நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400 தாண்டி சென்று கொண்டிருக்கின்றது. நாடு முழுவதும் உள்ள அனைவரையும் இது கவலை அடைய செய்திருக்கின்றது.

தொடர்ந்து மீட்பு பணி 8-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. ஒரு பக்கம் பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மற்றொரு பக்கம் 200க்கும் மேற்பட்டோர் மாயமாகி இருப்பதால் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயரும் என்று கூறப்படுகின்றது. மீட்பு பணியில் ராணுவ வீரர்கள் மற்றும் தேசிய மீட்பு படையினர் பலரும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்கிடையே நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு உதவும் வகையில் பல்வேறு அரசியல் கட்சிகள், திரை பிரபலங்கள் நிதி உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு உதவி செய்யும் வகையில் கேரள முதல் மந்திரி பினராய் விஜயனை சந்தித்து வி ஐ டி பல்கலைக்கழகம் சார்பில் வேந்தர் ஜி விஸ்வநாதன் ஒரு கோடி ரூபாய் வரைவோலையை வழங்கி இருக்கின்றார். அப்போது விஐடி துணைத்தலைவர் சங்கர் விஸ்வநாதன் டாக்டர் ஜிவி செல்வம் உதவி துணை தலைவர் காதம்பரி விஸ்வநாதர் ஆகியோர் அருகில் இருந்தனர்.