நாடாளுமன்றத் தேர்தலுடன் ஆந்திர மாநிலத்திற்கு சட்டசபை தேர்தலும் நடைபெற்றது. இதில் தெலுங்கு தேசம் மற்றும் பாஜக கூட்டணி அதிக இடங்களை பிடித்து வெற்றி பெற்றது. அதன்படி அம்மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். சந்திரபாபு நாயுடு முதல் மந்திரி ஆனது முதல் தன்னை பழிவாங்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் இருந்த காலத்தில் முட்டை பப்ஸ் வாங்கியதில் கூட ஊழல் நடைபெற்றுள்ளது. 2019 முதல் 2024 வரை ஆந்திர பிரதேசத்தில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் தலைமையிலான ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி நடைபெற்ற நிலையில் அப்போது முதல் மந்திரி அலுவலகத்திற்காக 3.62 கோடி ரூபாய்க்கு முட்டை பப்ஸ் வாங்கப்பட்டுள்ளதாக கணக்கு காட்டப்பட்டிருக்கின்றது.
அதன்படி வருடத்திற்கு 72 லட்சத்துக்கும் முட்டை பப்ஸ்கள் வாங்கியுள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி கூறியிருக்கின்றது. அப்படி பார்த்தால் தினசரி 993 முட்டை பப்ஸ்கள் சாப்பிடுவதற்கு சமம், ஐந்து ஆண்டு காலத்தில் இதன் எண்ணிக்கை 18 லட்சம் ஆகும். பப்ஸ்களுக்கு மட்டுமே ஐந்து ஆண்டில் மூன்றே முக்கால் கோடி ரூபாயை செலவு செய்திருக்கின்றது என்றால் மற்ற விவகாரங்களுக்கு ஜெகன்மோகன் ரெட்டி, அரசு பணத்தை எப்படி முறைகேடாக பயன்படுத்தி இருப்பார் என்று தெலுங்கு தேசம் கட்சி குற்றம் சாட்டியிருக்கின்றது.