பெண்கள் பாலியல் இச்சையை கட்டுப்படுத்தணும்… ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பு… சுப்ரீம் கோர்ட் கொடுத்த பதிலடி…!

பெண்கள் பாலியல் இச்சையை கட்டுப்படுத்தணும்… ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பு… சுப்ரீம் கோர்ட் கொடுத்த பதிலடி…!

தங்களை காப்பாற்றிக் கொள்வதற்கு பெண்கள் தங்களின் பாலியல் இச்சைகளை அடக்கி கொள்ள வேண்டும் என்று கல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்த நிலையில் அந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து இருக்கின்றது. கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மைனர் பெண் ஒருவரை இளைஞர் ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்ததாக வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது மைனர் பெண்ணுக்கும் அந்த இளைஞனுக்கும் காதல் உறவு இருந்து வந்ததால் இது வன்கொடுமையாகாது எனவும், இதனால் இளைஞனை வழக்கிலிருந்து விடுவித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியிருந்தார், மேலும் தங்களின் உடல் கண்ணியத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு பெண்களின் கடமை.

சுய கண்ணியத்திற்கு ஊறுவிளைவிக்கும் வளர்ச்சியை தடுக்கும் பாலியல் இச்சைகளை கட்டாயம் கட்டுப்படுத்த வேண்டும். இரண்டு நிமிட பாலியல் திருப்திக்காக தன்னிலை இழக்கும் பெண்கள் சமுதாயத்தின் பார்வையில் தோல்வி அடைந்தவர்களாகவே தெரிவார்கள் என்று நீதிபதி அறிவுரை வழங்கியிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கிலிருந்து குற்றவாளி விடுவிக்கப்பட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து அந்த பெண் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி ஏ எஸ் ஓஹா உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து அந்த இளைஞனை குற்றவாளி என்று அறிவித்திருந்தது. மேலும் இதுபோன்ற சிக்கலான வழக்குகளை எப்படி கையாள வேண்டும் என்று உயர் நீதிமன்றத்திற்கு அறிவுரையும் வழங்கி இருக்கின்றது.