மாணவியை மிரட்டி 3 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம்… டியூசன் ஆசிரியர் செய்த கொடூர சம்பவம்…!

மாணவியை மிரட்டி 3 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம்… டியூசன் ஆசிரியர் செய்த கொடூர சம்பவம்…!

நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டி மூன்று ஆண்டுகளாக மாணவியை டியூசன் ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றார்.

கேரள மாநிலம் திருச்சூர் அருகே வெள்ளாஞ்சிரா பகுதியை சேர்ந்த நபர் சரத். இவர் அப்பகுதியில் 3 டியூஷன் மையத்தை நடத்தி வருகின்றார். அதில் ஒரு மையத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிளஸ் ஒன் மாணவி ஒருவர் கணிதப் பாடத்திற்காக டியூஷன் சேர்ந்திருக்கின்றார். அந்த மாணவியை அவருக்கு தெரியாமல் டியூஷன் சென்டர் உரிமையாளரான சரத் நிர்வாண வீடியோ மற்றும் புகைப்படத்தை எடுத்து இருக்கின்றார்.

அதை காட்டி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றார். மேலும் வெளியில் யாரிடமாவது கூறினால் இந்த வீடியோவை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி இருக்கின்றார். தற்போது அந்த மாணவி பி.டெக் படித்து வரும் நிலையில் சரத்தின் டியூஷன் சென்டரில் தொடர்ந்து படித்து வருகின்றார்.

தன்னிடம் இருக்கும் புகைப்படங்களை காண்பித்து மிரட்டியபடி கடந்த மூன்று வருடமாக அவர் பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றார். இந்த சம்பவம் தொடர்பாக அந்த மாணவி தனது தோழி ஒருவரிடம் கூற தோழியின் அறிவுறுத்தரின் பெயரில் சரத் மீது பாதிக்கப்பட்ட மாணவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

பின்னர் போலீசார் அவரை கைது செய்து விசாரணை செய்ததில் இந்த ஆசிரியரால் பல மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளானது தெரியவந்துள்ளது. மாணவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்து இருக்கிறார்கள். மேலும் மாணவியின் ஆபாச படங்கள் உள்ளதா? என்று ஆசிரியரின் செல்போன் உள்ளிட்டவற்றில் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.